தெய்வங்கள்

தெய்வங்கள்

மலரும் தேனைத் தருவதில்லை

மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை

பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை

பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும்  இப்போ விருப்பமில்லை

ஆக்கல் குறைந்த காரணத்தால்
அழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை

வருடக் கடைசி  உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?









Comments

  1. வித்தியாசமான சிந்தனை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க. பனிக்காலம் உடலுக்கும் மனசுக்கும் இதமானதுதான் என்றாலும் அது பெரும்பாலும் தாவரங்களுக்கு எதிரியாகவே உள்ளது.

    ReplyDelete
  3. ''..பனியில் தேனிகள் வருவதில்லை
    பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
    அதிகப் பனியால் ஆண்களுக்கும்
    அதற்கும் இப்போ விருப்பமில்லை..''
    eniya vaalththu.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
  5. எல்லாம் அவன் செயல்...!@

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வருவது தேவை இல்லையா ?
    +1

    ReplyDelete
  7. ஆக்கல் குறைந்த காரணத்தால்
    அழித்தலை ஆண்டவன் செய்வதால்
    அதனால் மக்களில் பலபேர்
    ஆலயம் செல்வதே உண்மை..இந்த அடிகள் நூற்றுக்கு நூறு உண்மை. மனதில் நின்ற கவிதை.

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை..

    த.ம. +1

    ReplyDelete
  9. வித்தியாசமான, புதிய கோணத்தில் தங்களின் சிந்தனை அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. மார்கழிப் பனி, இளைஞர்களுக்கு இன்பமாகவும், தங்களைப் போன்றவர்களுக்குத் துன்பமாகவும் இருப்பதை உணரமுடிகிறது.......!

    ReplyDelete
  11. பனியின் போர்வைக்குள் வேறு சிந்தனை. அருமை.

    ReplyDelete
  12. அருமை +1

    [[மார்கழி மாதத்தில் வண்டுகள்
    மலர்களைத் தேடி வருவதில்லை]]

    இது சரியான பொருள் கொண்டதா?

    ReplyDelete
    Replies
    1. ஆம்.பனியினால் மொட்டுமே கருகுவதால் பூக்களும் பூக்கா நிலையில் இருக்கையில் தேனிக்கள் எப்படி வரும் ? மார்கழிப் பனியின் மகத்துவம்.அதுபோல் மனிதனுக்கும் (பாலின தூண்டுதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடும்) சில தவிர்க்க இயலா சூழ்நிலைகள் உண்டல்லவா?

      Delete
  13. வித்தியாசமான சிந்தனை ஐயா...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு....

    ReplyDelete
  14. மலரும் தேனைத் தருவதில்லை
    என்றதும்
    பால் தரும் மலரும்
    கள் தரும் மலரும்
    நினைவுக்கு வர
    தொடர்ந்து படித்தேன்
    "வருடக் கடைசி உனக்கும்
    வரவு செலவு உள்ளதோ?
    ஏனிந்த வேதனை இறைவா!
    இதுவும் உனது செயலா?" என
    விழித்திருப்பது தெரிகிறதே!
    சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete
  15. //மார்கழி மாதத்தில் வண்டுகள்
    மலர்களைத் தேடி வருவதில்லை

    பனியில் தேனிகள் வருவதில்லை
    பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
    அதிகப் பனியால் ஆண்களுக்கும்
    அதற்கும் இப்போ விருப்பமில்லை//

    இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது கவியாழி கவிஞரே!!!

    அருமை!
    த.ம.+

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more