தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே
மனதில் தோன்றும் எல்லாமே
மறைக்க முடியா தருணங்களாய்
மடியும் நிலைக்கு வந்துவிடும்

மலையும் கடலும் வானமும்
மரமும் செடியும் கொடியுமே
மனதில் பாரத்தைக் குறைத்திடும்
மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும்

தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
தொடரும் துன்பமும் விலகிடும்
தொடரும் நட்பின் ஆதரவால்
தொல்லைகள் மறைந்து சென்றிடும்

இதயம் உணரா மனிதருக்கும்
இனியவை செய்திடசொல்லிடும்
இன்பம் தந்திடும் செயல்களை
இனியும் செய்ய வைத்திடும்

கலக்கம் வேண்டாம் நண்பனே
கடவுள் போல வந்தேனும்
கருணை கொண்டு உதவியாய்
கடந்து செல்ல வைப்பார்கள்

(கவியாழி)




Comments


  1. Thursday, 23 January 2014
    மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...
    மகிழ்ச்சி இல்லா நேரத்திலே
    மனதில் தோன்றும் எல்லாமே
    மறைக்க முடியா தருணங்களாய்
    மடியும் நிலைக்கு வந்துவிடும்

    மலையும் கடலும் வானமும்
    மரமும் செடியும் கொடியுமே
    மனதில் பாரத்தைக் குறைத்திடும்
    மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும்

    தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
    தொடரும் துன்பமும் விலகிடும்
    தொடரும் நட்பின் ஆதரவால்
    தொல்லைகள் மறைந்து சென்றிடும்

    அற்புதமான வரிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. /// தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
    தொடரும் துன்பமும் விலகிடும் ///

    பல வரிகள் உண்மை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. #கருணை கொண்டு உதவியாய்
    கடந்து செல்ல வைப்பார்கள்#
    மனம் சோர்ந்த நேரத்தில் இப்படி ஒரு தேவதை தேவையாய் இருக்கிறாள் !
    த ம 3 To 4

    ReplyDelete
  4. நட்புகள் மேல உங்களுக்கு இவ்வளவு பாசமா? இதே பாணியில் தொடர்கிறீர்களே அதனால் கேட்டேன். நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. //தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
    தொடரும் துன்பமும் விலகிடும்
    தொடரும் நட்பின் ஆதரவால்
    தொல்லைகள் மறைந்து சென்றிடும்///

    நட்பின் பெருந்தக்க யாவுள
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. (த.ம.6) தொல்லைகளை நீக்குபவர்கள் நண்பர்களே என்று புரிந்துகொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  7. "தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
    தொடரும் துன்பமும் விலகிடும்
    தொடரும் நட்பின் ஆதரவால்
    தொல்லைகள் மறைந்து சென்றிடும்" என்ற
    வரிகள் ஆறுதல் அளிக்கிறதே!

    ReplyDelete
  8. நம்பிக்கை தரும் கவிதை வரிகள்..... பாராட்டுகள்.

    ReplyDelete
  9. சத்தியமான வார்த்தைகள் அருமை அருமை ....!

    ReplyDelete
  10. நல்ல அருமையான நேர் சிந்தனைகளை விதைக்கும் அருமையான கவிதை வரிகள்!!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more