தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....


துணையாய் தொடர்ந்து வந்து
தோழனாய் நட்பு கொண்டு
மனதில் குடிகொள்ளும்
மனைவியாய்இருக்க வேண்டும்

பெற்றவரை பிள்ளைகளைப் போல்
பேதமும் பார்க்காது விருப்பமாய்
உற்றாரும் வாழ்த்திச் செல்லும்
உற்றவளின் குணமே வேண்டும்

பிறி தொன்றும் கேட்காத
பிறரைப் பற்றிக் கூறாத
அன்புடனேஆசை கொள்ளும்
அன்னையாய் இருக்க வேண்டும்

ஆசை அன்புக் கென்று
அகம் மகிழ பிள்ளையுமே
அளவான செல்வமும் சேர்த்து
அன்பான குடும்பம் வேண்டும்

பணி முடிந்து வரும்போது
பணம் மட்டும் கேட்காத
குணமுள்ள மனைவி வேண்டும்
குடும்பம் மகிழத் துணைவேண்டும்

(கவியாழி)

Comments

  1. //ஆசை அன்புக் கென்று
    அகம் மகிழ பிள்ளையுமே
    அளவான செல்வமும் சேர்த்து
    அன்பான குடும்பம் வேண்டும்///
    அருமை ஐயா

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா....சிறப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அனைத்து வேண்டும் இருந்தால், வாழ்வு சொர்க்கம் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது...

    .இப்படி இருந்தால் அந்த வீடு கோயில்..

    அழகிய கவிதை

    ReplyDelete
  5. குடும்பம் மகிழ மட்டுமா?நல்ல தோழமையும்,நல்ல நட்பும் வளர துணை நல்ல நல்ல துணை அவசியம்/

    ReplyDelete
  6. நல்ல மனைவி...நல்ல வீடு... நல்ல குடும்பம்...தெய்வீகம்...

    ReplyDelete
  7. வேண்டியது எல்லாம் தட்டாமல் கிடைத்தால் சொர்க்கம் அதுதானே சார்...

    ReplyDelete
  8. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html#comment-form

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்