தெய்வங்கள்

தெய்வங்கள்

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை
தமிழில் இல்லா வார்த்தைகளில்
பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர்
பாசம் கொண்டே அழைத்திடுவீர்

நேற்றும் நடந்தக் கதைகளையே
நேசம் கொண்டே பேசிடுவீர்
நேர்மை வீரம் சத்தியத்தை
நேரில் கண்டேப் பேசிடுவீர்

ஊரும் உறவும் உள்ளதென
உரிமைச் சொந்தம் நல்லதென
பேரும் புகழாய் வாழ்ந்திருந்த
பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர்

வீரம் மிகுந்த தமிழர்களின்
வேட்கை நிறைந்தப் பாட்டுகளும்
வீதியில் சூழ்ந்தே விளையாடி
விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர்

தாழ்ந்த உணர்வும் இன்றில்லை
தரணி முழுதும் கொண்டாடி
தமிழர் திருநாள் பொங்கலையே
தமிழர் அனைவரும் பொங்கிடுவீர்

மஞ்சள் கரும்புடன் படையலிட்டு
மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு
பொங்கலை வைத்துப் படையலிட்டு
புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர்

பொங்கலே பொங்குக என்றுரைத்து
பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து
மங்கள நாளில் ஒற்றுமையாய்
மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர்


(கவியாழி)

Comments

  1. அருமை..
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆத்மா அவர்களுக்கும் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete
  2. பாடல் கண்டு உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கக் கண்டேன்.
    இன்பம் கொண்டேன். பொங்கல் வாழ்த்துக்கள். !

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரவாணி நலமா? வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

      Delete
  3. சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி.அம்பாலடியாள் அவர்களே

      Delete
  4. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்.டிடி அவர்களே

      Delete

  5. "பொங்கலே பொங்குக என்றுரைத்து
    பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து
    மங்கள நாளில் ஒற்றுமையாய்
    மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர்" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறேன்!

    தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் காசிலிங்கம் அவர்களே

      Delete
  6. இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. மச்சான்,மருமகள்கள் மற்றும் மருமகனுக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள் ராஜி.தங்கச்சி

      Delete
  7. உங்களுக்கும் நம்முடைய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் டிபிஆர்.ஜோசப் அவர்களே

      Delete
  8. கவியாழியாருக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய - இதய பூர்வமான
    உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நா.முத்துநிலவன் அவர்களே

      Delete
  9. அருமை கவிதை ஐயா ...
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஹிஷாலீ அவர்களே

      Delete
  10. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நாஞ்சில் மனோ அவர்களே

      Delete
  11. வணக்கம் சகோதரர்
    பொங்கலை முன்னிட்டு பொங்கி வந்துள்ள கவிதை மிக நன்று. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அ.பாண்டியன் அவர்களே

      Delete
  12. வணக்கம்
    ஐயா
    பொங்கல் கவிதை சிறப்பாக உள்ளது...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். ரூபன்அவர்களே

      Delete
  13. கவிதை அருமை!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோ சாமிநாதன் அவர்களே

      Delete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி திரு.குமார் அவர்களே

      Delete
  15. இனிய பொங்கலுக்கு இனியதொரு கவிதை!!! கவிதையிலேயே பொங்கல் கொண்டாடிவிட்டீர்கள்!!

    வாழ்த்துக்கள்!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி துளசிதரன் கீதா.அவர்களே

      Delete
  16. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தமிழ்மொழி பிரகாசம் அவர்களே

      Delete
  17. தமிழ்மணம் 7

    வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. நன்றியுடன் ,பொங்கல்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், இனிய தைப் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
  20. நல்ல கவிதை.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more