தெய்வங்கள்

தெய்வங்கள்

மனச்சிதைவு ஏன்? விடுபட முடியுமா?

      மனச்சிதைவு எதனால் வருகிறது ? யாரால் வருகிறது ? எப்படி போக்க முடியும் ? இது ஒரு புரியாத புதிர் . பலரும் இம்மாதிரியான விஷயங்களில்  சீக்கிரம்  குழம்பி விடுகிறார்கள் அதனால் தங்களின் வாழ்வே பறிபோய்விட்டதாக எண்ணுகிறார்கள் இனிமேல் முடியாது என்னால் முடியாது எப்படி முடியும் என்பதுபோன்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து தவறான முடிவெடுத்து விடுகிறார்கள்

       இது தவறான நிகழ்ச்சியுமல்ல  இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு .அதை அவர்கள் அணுகும் முறையில்தான்  மாற்றம் வேண்டும்..ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குணமுண்டு எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை  சிரிப்பதில்லை  உறங்குவதில்லை இது எல்லாமே மனம் சார்ந்த விஷயம்.இது தான் நம்மை நாமே வேறுபடுத்தி பார்ப்பதால் ஏற்படும் நிகழ்வு.முடிவு தருணம்.
 
         அணுகுமுறையை மாற்றிகொண்டாலே அத்தனையும் சரியாகிவிடும் பசி தூக்கம் ஏக்கம்போல  அத்தனையும் நடைமுறை நிகழ்வுகளே அதை எல்லோரும் எப்போதும் எல்லோருக்கும் ஏற்படும் நிகழ்வு என்றே எண்ண வேண்டும் .அப்படி மனதில் எண்ண தவறுவதால் ஏற்படும் மன மாற்றமே  மனசிதைவு என்று நான் நம்புகிறேன்.

        பெரும்பாலும் மற்றவரைப் பார்த்து அவர் சந்தோசமானவர்,வசதியானவர் ,தகுதியானவர் அவருக்கு அதிஷ்டம் என்று  தன்னைத்தானே தாழ்த்தி தனிமை படுத்திக் கொள்வதால்தான் பெரும்பாலும் நல்ல சந்தர்பங்களை இழந்து விடுகிறோம்.ஏன் நாமும் முயற்சி செய்யகூடாது முயற்சி என்பது தவறான விஷயமா? இல்லையே முயற்சியும்  முதிர்ச்சியும் இல்லாததாலே  பெரும்பாலான தோல்விகள் ஏற்படுவதுண்டு.

        தற்கொலைகள் அவமானங்கள் அச்சுறுத்தல்கள் எல்லாமே  இதன் எதிரொலியால் ஏற்படுவது,இது அவசியமான முடிவா? இதனால் ஏற்படும்  எதிர் விளைவுகளென்ன  என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் இதுதான் மற்ற உயிரினங்களிளிருந்து நம்மை வேறுபடுத்தி காண்பிக்கிறது சிந்திக்க முடிகிறது , செயல்பட முடிகிறது.மாற்றம் என்ற தாரக சொல்லுக்கு எத்தனை  சக்தி உள்ளது என்பதை மாற்றி யோசித்துபாருங்களேன்.
 
       ஒவ்வொருவருக்கும் சமூகக் கடமை என்பது பொதுவானது .குழந்தையை தாய் வளர்ப்பதும் நல்ல படிப்பையும் அறிவையும் கொடுப்பது தந்தையின் கடமையெனவும்  பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டுமென்பதும்  அவர்களே வேலை தேடிக்கொள்ள வேண்டுமென்பதும் நல்ல வாழ்கையை வாழ வேண்டுமென்பது  எல்லோருக்கும் பொதுவானது, உங்கள் வாழ்கையை தீர்மானிப்பது உங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையே  அக்கறையே.

    .ஆம் எல்லோரும் தனிமனிதனுக்காக மட்டுமன்றி சமூகதிற்காகவும் வாழ வேண்டியுள்ளது. சமூகபொறுப்பு என்பது இயல்பானது நான் ஏற்கனவே சொல்லியதுபோல வளர்ப்பதும் அறிவுறுத்துவதும் படிப்பதும்அவசியம் என்பது போல நமக்கும் சமூகயும் கடமை உள்ளது .இதுதான் மனித
கோட்பாடு ஏன் உயிருள்ள அனைத்து  ஜீவனுக்கும் இதுதான்  செய்கையாகும்

     நாம் செய்ய தவறும் செயல்களே பின்னாளில்  மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது.இதுபோல பல விஷயங்களில் ஏற்படுத்திக்கொண்ட தவறான முடிவினால் காரணத்தால் செய்கையினால் மனச்சிதைவு காரணமாகிறது.எல்லோருக்கும் இதுபோண்ற தருணங்கள் நிகழ்வதுண்டு.
எப்போது  கோழைத்தனமான முடிவு  செய்கிறோமோ அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டும். மனைவி பிள்ளைகள் பெற்றோரும் வருத்தப்படுவார்கள் கஷ்டப்படுவார்கள் நிம்மைதி இழப்பார்கள் பாதிப்படைவார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

       தீர்வென்ன? முடிவென்ன ? எல்லாமே முடியும் நீங்கள் நீங்களாகவே உங்களுக்காக நீங்களாகவே  யோசித்தால் எல்லாமே  நன்மையாக முடியும் .
அப்படியில்லையெனில்  உங்களின் பெற்றோர் உறவினர்   மனைவி  ஏன் உங்கள் பிள்ளைகள் கூட உங்களின் பிரச்சனைகளுக்கு அழகாக விடை சொல்லுவார்கள் ,இம்மாதிரியான நேரங்களில் யாரையும் உதாசீனம் செய்யகூடாது .கேட்டுத் தெரிந்தால்  தவறில்லை.அப்படியும் தீர்வு கிடைக்க வில்லையெனில் இறுதியில் மருத்துவரிடம்  சென்று உண்மையை சொல்லி  சரியான ஆலோசனையுன் தீர்வு காண முடியும்.

     வாழ்க்கை என்பது நம்பிக்கையின் உடன்பாடே ,வாழ வேண்டுமென்றால்  உங்கள்மேல் நம்பிக்கை வையுங்கள்  உங்களால் முடியும் என்பதை நீங்கள் உண்மையாய் நேர்மையாய் துணிவாய் யோசித்தால் எல்லாமே முடியும் .முடியும் என்ற முடிவே உங்களை இறுதியில் ஜெயிக்க வைக்கும் .உறுதியான இறுதியான சமூக அக்கறையுள்ள முடிவு நிச்சயம் உங்களைக் காப்பாற்றும்.

      மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம்,தியானம்,மன அமைதிக்கான பயிற்சி ,நண்பர்கள் மருத்துவ உதவி போன்றவைகளாலும் உங்களை இச்சிதைவிலிருந்து காப்பாற்றும். அல்லது  மலைப்பிரதேசம் கடற்கரை,நல்ல காற்றோட்டமான இயற்கை எழில் சூழ்ந்த இடங்களும் மன அமைதி தரும்.ஆனால் எல்லாமே உங்கள் கையில் வாழ விரும்பினால்  நீங்கள்தான் தெளிவான தீர்க்கமான நம்பிக்கையான முடிவெடுக்க வேண்டும் .உங்கள் வாழ்க்கையை  நீங்களே மனநிறைவோடு வாழுங்கள்.

Comments

  1. //வாழ்க்கை என்பது நம்பிக்கையின் உடன்பாடே, வாழ வேண்டுமென்றால் உங்கள்மேல் நம்பிக்கை வையுங்கள்.//
    சரியாக சொன்னீர்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டாலே போதும் எந்த வித இடர்பாடும் இல்லாமல் வாழலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,நம்பிக்கை வைத்தால் நன்றாக வாழலாம்
      மீண்டும் வருக ஆதரவு தருக

      Delete
  2. பயன் தரும் ஆலோசனை!

    ReplyDelete
  3. நம்பிக்கையளிக்கும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கையா ,தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  4. தன்னை நம்பினால் இதுபோல மனப்பிறழ்வு நோயெல்லாம் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.மற்றவர்களுடன் ஏன் நம்மை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். வேண்டாமே. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்,தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  5. முடியும் என்ற முடிவே உங்களை இறுதியில் ஜெயிக்க வைக்கும் .உறுதியான இறுதியான சமூக அக்கறையுள்ள முடிவு நிச்சயம் உங்களைக் காப்பாற்றும்.

    நம்பிக்கை தரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா!தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  6. Arumaiyaana vilakkam Paarattukal.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,தொடர்ந்து பாருங்க

      Delete
  7. நல்ல விஷயங்கள் நிறையவே சொல்லியிருக்கிறீங்க.யோசிக்க வைக்குது.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஹேமா வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  8. யோசிக்கணும் ,யோசிக்க வச்சி யாசிக்க வைப்பேன் அதற்காக?

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more