தெய்வங்கள்

தெய்வங்கள்

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா?
--------------------------------------------

மல்லிகைப் பூ தொடுத்து
மலராக அசைந்து வந்து
சொல்லாமல்ச் சொல்லியதாய்
செல்லமாய்ச் சீண்டுகிறாய்
சிறைபிடித்துத் தாண்டுகிறாய்

துள்ளி ஒடும் மானைப்போல
தோகைவிரித்த மயிலைப்போல
மேல்லபேசும் தேனிப்போல
மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
மேனியெல்லாம் சிலிர்க்குதடி

காரிகையே கற்கண்டே
காலம் சொல்லும் பூச்செண்டே
கற்பனையை கடந்து வந்து
கட்டியணைக்க மாட்டாயா
கனிரசத்தை உணர்வாயா

உள்ளமெல்லாம் புஞ்சையாக
உழவனுக்கு மழையாக
எண்ணிகொள்ளத் தோனுதாடி
ஏக்கமின்னும் கூடுதடி
என்னருகே செல்லும்போது

வானமின்று வெளிச்சமழை
வந்திறங்கும் நேரமுன்னே
வாசமுல்லை மார்கழியே
வந்தென்னை அணைப்பாயா
வண்டின்சுவைத் தெரிவாயா

Comments

  1. ''..காரிகையே கற்கண்டே
    காலம் சொல்லும் பூச்செண்டே..''
    நல்ல வருணனை.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.நீங்க வந்ததுக்கும் வாழ்த்தியமைக்கும்

      Delete
  2. நல்ல உவமானங்களுடன் அழகிய கவிதை! ரசித்தேன்... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.தொடர்ந்து படிங்க கருத்து போடுங்க

      Delete
  3. அட அட அட !!!காதல் ரசம் சொட்டுது...அருமையா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா. நல்லா இருக்குங்களா அப்பா தொடர்ந்து படிங்கம்மா

      Delete
  4. மனம் மயக்கும் வார்த்தைகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நீங்க தளத்துக்கு வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  5. எளிமையான உவமைகளுடன் சுவையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. ஆம் எளிமையாகதான் எழுதினேன்.நீங்க தளத்துக்கு வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  6. "உள்ளமெல்லாம் புஞ்சையாக
    உழவனுக்கு மழையாக"... மிகவும் அருமை! நல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கிரேஸ்.ஒடர்ந்து தளத்துக்கு வாங்க உங்க கருத்தை சொல்லுங்க

      Delete
  7. வானமின்று வெளிச்சமழை
    வந்திறங்கும் நேரமுன்னே
    வாசமுல்லை மார்கழியே

    அழகான கவிதைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா.தொடர்ந்து படிங்கம்மா

      Delete
  8. உள்ளமெல்லாம் புஞ்சையாக
    உழவனுக்கு மழையாக
    எண்ணிகொள்ளத் தோனுதாடி//

    காதல் கவிதையிலும் உழவன் நலம்!
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து படிங்க கருத்துக்களைச் சொல்லுங்க

      Delete
  9. காதல் ரசம் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தொடர்ந்து படிங்க

      Delete
  10. அன்புள்ளம் கொண்ட கவியாழி சாருக்கு,

    நான் கொடுத்த வாக்கை மீறுவதாக நினைக்கவேண்டாம், பெற்றோரை வனங்கும் உம் உத்தம குணத்தை பாராட்டவே கருத்திடுகிறேன். வலைப்பதிவுகளில் தம் பெற்றோரை குறிப்பிடுவதை இப்போது இரண்டாவது முறை கானூறும் போது மகிழ்சியடைந்தேன். பதிவர் ”பெயர் சொல்ல விரும்பவில்லை” (அவரு பேரே அதாங்க) இது போல் பெருமைப்படுத்தி இருப்பார்.

    வந்தது வந்துட்டேன் உங்க கவிதை பத்தி ஒரு வரி: அபாரம்.

    திருவாடானை ஆற்றலரசு.

    ReplyDelete
  11. வாசமுல்லை வந்து மயக்குகின்றாள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா அப்பா தொடர்ந்து வாங்க

      Delete
  12. கவர்ந்திழுக்கிறது கவிதை.ஓசை நயம் இன்பம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க முரளிதரன்

      Delete
  13. கண்ணதாசன்,

    காரிகையே கற்கண்டே
    காலம் சொல்லும் பூச்செண்டே
    மற்றும்
    மேல்லபேசும் தேனிப்போல
    மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
    மேனியெல்லாம் சிலிர்க்குதடி

    அழகான இந்த வரிகள் தந்த உற்சாகத்தில் விசிலடித்தேன்.அருமை அருமை. காதல்கவிதைகளில் பின்னுகிறீர்கள்.

    சந்தானகிருஷ்ணன்

    ReplyDelete
  14. வண்டுக்குத் தெரியும் மலரின் சுவை(தேன்);மலரும் தெரிந்துகொள்ள வேண்டும் வண்டின் சுவை!
    நன்று கண்ணதாசன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அன்பரே.நீங்கள் என்பக்கத்துக்கு வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more