தெய்வங்கள்

தெய்வங்கள்

எங்கே நிம்மதி?

ஏழெட்டு வீடிறுக்கு
ஏசி  காரும்
நிறைந்திருக்கு

கூவிட்ட குரலுக்கு
கூட்டமாக நிறைய
 வேலையாளிருக்கு

வங்கியிலே பணமிருக்கு
வாங்கி வைத்த
நிலமிருக்கு பொருளிருக்கு

நடைபோக தெம்பிருக்கு
நலம்கேட்க
நட்பிங்கே மட்டுமிருக்கு

இத்தனை  இருந்தும்
இறைவனை நினைத்தும்
தப்பிருக்கே

ஆம்

பெற்றவரை விட்டுவிட்டு
பொறுப்பை மறந்தேனே
தவறு செய்தேனே

நிறைந்த சொந்தமெங்கே
நண்பர்களேங்கே
தமிழே நீயும் எங்கே

இத்தனையும் மறந்து
இங்கே தனியாய் வாழ்வதா
இனிய சொந்தம் மறப்பதா

உண்பதும் உணவா
உறவிழந்து மகிழ்வா
எங்கே நிம்மதி

பணம் பொருள்
போதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்

சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்


Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more