தெய்வங்கள்

தெய்வங்கள்

மீண்டும் அந்தநாள் வாராதோ !

11.03.1990 அந்தநாள் ஞாபகம்
11.03.2013  அன்றும் வருவதால்
வாழ்ந்த நாள் எண்ணிக்கையில்
வருடம் இருபத்து மூன்றாகிறது

கொஞ்சநாள் வாழ்க்கையில்லை
குறைவான மகிழ்ச்சியில்லை
நிறைவான நாட்களிலே-எங்களுக்கு
நெடுந்தூரப் பயணமிது

எல்லாமும் பார்த்துவிட்டோம்
ஏழ்மையைத்  தாண்டிவிட்டோம்
எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன்
எழுதியதாய் நிறுத்திவிட்டோம்

தொலைவானப் பயணத்திலே
தோல்விகளும் பார்த்திருந்தும்
இனிதான வாழ்க்கைக்கு-இனியும்
இணைந்தே வாழ உள்ளோம்

இந்நாளில் எல்லோரும்
இனிய வாழ்த்துச் சொல்லி
இனிவரும் நாட்களையும்-சேர்ந்து
இன்பமாக்க வாழ்த்துங்களேன்

Comments

  1. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. நன்றிங்க நண்பரே திங்கட்கிழமைதான் எனது திருமண நாள்

    ReplyDelete
  3. இனிதான வாழ்க்கைக்கு-இனியும்
    இணைந்தே வாழ உள்ளோம்

    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  4. இன்பம் பொங்கும் மண வாழ்க்கை
    இனிதாய் இன்று போல் என்றும் தொடர என்
    இனிய வாழ்த்துக்கள் ஐயா !........

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா ,திங்கட்கிழமைதான் என் திருமண நாள்

      Delete
  5. 23 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வரும் இனிய, இளைய ஜோடிகளுக்கு, 38 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வரும் ஜோடிகளின் வாழ்த்துகள்!
    பரஸ்பரப் புரிதலுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!உங்கள் அன்பில் மலர்ந்த நல் ரோஜாவுக்கும் அன்பு ஆசிகள்!

    ReplyDelete
    Replies
    1. நான் மிகமிக கொடுத்து வைத்தவன் உங்களின் வாழ்த்து கிடைத்தமைக்கு நன்றிங்கம்மா

      Delete
  6. பல்லாண்டு இனிதாய் வாழ வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    (கவிதை பாருங்கள்(photo,poem)
    அன்ராட்டிக்கா
    சந்த மொழியில் தினம்….
    மதிப்பும் மரியாதையும்..
    last pathivu...
    மண்ணும் சிறப்புறும்!….

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்கம்மா நான் பார்க்கிறேன் படிக்கிறேன்

      Delete
  7. சகோதரா!

    அன்பை விதைத்து அன்பை வளர்த்து அன்பை அறுவடைசெய்து அன்பினைப்பொங்கி இன்பமுற என்றுமே இனிதாய் இருவரும் உண்ண இனிதான என் வாழ்த்துக்கள்!

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீங்கள் இருவரும் வாழியவே இல்லறம்கண்டு!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோதரி. உங்களின் வாழ்த்தும் எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும்

      Delete
  8. இனிதான வாழ்க்கைக்கு-இனியும்
    இணைந்தே வாழ உள்ளோம்//

    இனிவரும் நாட்களையும்-சேர்ந்து
    இன்பமாக வாழுங்கள்.

    இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்

      Delete
  9. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
    உங்கள் மகளுக்கு ஆசிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் என் மகளுக்கும் சேர்த்து ஆசி வழங்கியதுக்கு நன்றிங்கம்மா

      Delete
  10. நீங்க இத்தனை நாள் எழுதிய கவிதை எல்லாம் குப்பை இது மட்டும் தான் பரவாயில்லை நல்லாருக்கு.

    நமச்சிவாயம்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  12. திருமண நாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா.

      Delete
  13. வாழ்வாங்கு வாழ்க! வளமுடன்!

    ReplyDelete
  14. களிப்போடு வெள்ளிவிழா வைர விழா காண
    உளமார வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க ஸ்வராணி.உங்களின் விருப்பமும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

      Delete
  15. வலைச்சரம் கமெண்ட்டில் பாராட்டியதற்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உண்மையைத்தானே சொன்னேன் .

      Delete
  16. தொன்ணூறில் பிறந்த உமக்கு என்றும் பதினாறாய் இருக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மணவாழ்க்கையில் பிறந்தேன்

      Delete
  17. கவிஞருக்கு உளங்கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!
    ( இடையில் சிறிது குழப்பம் நேர்ந்தமைக்கு மன்னிக்கவும் )

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே,

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more