தெய்வங்கள்

தெய்வங்கள்

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்


பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன்
பறந்து வருவதை அறிந்தேன்
உறவை வளர்க்க துணிந்தேன்
உங்களை வரவேற்று மனம் கனிந்தேன்

சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன்
மீண்டும் மீண்டுமே சிரித்தேன்

நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசியப் பின்பு நினைத்தேன்

வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
தொலைவில் இருப்பதை அறிந்தேன்
தூய நட்பால் தொடர்ந்தேன்

நேரில் காண இருந்தேன்
நேரமின்றி நான் தவித்தேன்
தமிழைத் தேனாய் குடித்தேன்
தாகம் தீர்ந்து முடித்தேன்

Comments

  1. nanru.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற எனது வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. உங்கள் வரவேற்பில் உள்ளம் மகிழ்ந்தேன் !

    ReplyDelete
  4. சக பதிவர்களை கண்டு மகிழ்ந்தீர்களா?
    வாழ்த்துக்கள்.
    விழாப்பற்றி விரிவாக படங்களுடன் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் வரும் அப்படியே எழுதுகிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more