தெய்வங்கள்

தெய்வங்கள்

வணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன்
மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன்
விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும்
விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும்

மதிகெட்டும் மனமும் புண்பட்டும்
மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன்
வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின்
வசதிஇன்றி தினமும் தவித்தேன்

கதையும் மாறியது கடந்தது
கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது
நிலையும் தேறியது நெட்டும்
நிம்மதிதேடி இன்றுதான் வந்தது

வலைப்பக்கம் வாராது இருந்தேன்
வாழ்கையில் எதையோ இழந்ததாய்
வாரம் இரண்டும் தவித்தேன்
வந்துவிட்டேன் இனி மகிழ்வேன்

துணையாக வந்த எல்லோரும்
துடிப்பாக மீண்டும் வாருங்கள்
விலையாக அன்பைத் தருவேன்
வணங்கியே ஆசியும் பெறுவேன்

Comments

  1. வாருங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்துவிட்டேன் நண்பரே.இப்போதுதான் நெட் இணைப்பு கொடுத்தார்கள்

      Delete
  2. வாருங்கள் தோழரே
    விரக்திகளை விரட்டிடும்
    நல்மருந்து
    வலைப் பூ
    வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வந்துவிட்டேன் வருத்தங்களை வென்று வி ட்டேன்

      Delete
  3. வருக வருக... தினம் தினம் கவிதை தருக....

    ReplyDelete
    Replies
    1. தருகிறேன் மகிழ்வாய் எழுதுகிறேன்

      Delete
  4. வாருங்கள் ஐயா.....வாருங்கள் ஐயா.!.

    ReplyDelete
  5. காணவில்லையே நானும் காதலியாய் தவித்துக் கொண்டிருந்தேன் ...வரவுக்கு நன்றி !

    ReplyDelete
  6. விலையாக அன்பைத் தருவேன்

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. வாங்கய்யா வணக்கங்கய்யா!!

    ReplyDelete
  8. வாங்கையா! கவிஞர் அய்யா! வரவேற்க வந்தோமையா!

    ReplyDelete
  9. வருக வருக!! வந்த வருத்தம் நீங்கியதால் இனி நாளும் தருக!

    ReplyDelete

  10. வலைப்பக்கம் வாராது இருந்தேன்
    வாழ்கையில் எதையோ இழந்ததாய்
    வாரம் இரண்டும் தவித்தேன்
    வந்துவிட்டேன் இனி மகிழ்வேன்//


    தங்கள் வரவு கண்டு
    நாங்களும் வருத்தம் நீக்கினோம்
    மனம் மகிழ்வு கொண்டோம்
    வருக தொடர்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வருக வருக! கவிபல தருக! தருக!

    ReplyDelete
  12. வாருங்கள்.
    வாழ்க வளமுடன்.
    ஆறுதல் தரும், உற்சாகம் தரும் வலைத்தளம் அல்லவா!!

    ReplyDelete
  13. வாங்கய்யா! வணக்கமய்யா!! வந்து வழக்கம் போல் கலக்குங்கய்யா!!!. அய்யாவின் மனக்கவலை சூரியன் முன்னின்ற பனித்துளியாய் மறைந்து போக நான் இறைவனை வேண்டிகிறேன். //துணையாக வந்த எல்லோரும்
    துடிப்பாக மீண்டும் வாருங்கள்// கண்டிப்பாகப் புத்துணர்வோடு வருவோம். இருவாரங்கள் கழித்து மீண்டு(ம்) வந்தமைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more