தெய்வங்கள்

தெய்வங்கள்

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை
கண்டு பிடிக்க முடியவில்லை
கண் அழற்சியானதால் எப்போதும்
கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை

இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க
இண்டு இடுக்கு  இடமெல்லாம்
இரண்டு நாளாய்த் தேடுகிறோம்
இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை

நாவறண்டு கத்தினாலும் முடியாது
நாநயமாய் பேசினாலும் வந்திடாது
நான்வைத்த இடத்தைக் காணாமல்
நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது

மூன்று வயது நினைவுகூட
முந்தி கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை

பேயறைந்த முகத்தைப் பார்த்து
பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள்
பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
பேருதவி மனைவியும் செய்கிறார்கள்

வீட்டுக்கு வந்தவரின் கதையை
விருப்பமின்றிச் சொன்னபோது  நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை




Comments

  1. எப்போது தான் கிடைத்தது...?

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற கண்ணாடியைத் தொலைத்தவரிடம் கேட்டுச் சொல்கிறேன்

      Delete
  2. பல சமயங்களில் கண்ணாடியை கை தவறி வைத்து விட்டு தேடுபவர்கள் பலர்....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாஞாபகமறதிம் வாலிபமில்லா வயசுக் கோளாறுதான் அதாங்க

      Delete
  3. எப்பொழுதுமே இரண்டு கண்ணாடி வைத்துக்கொள்வது நன்று.
    மற்றொன்று எப்பொழுதுமேகண்ணாடியை செல் போனுடன் சேர்த்து வைப்பது.நமது செல் போனுக்கு நமது வீட்டில் உள்ள மற்றவரை போன் செய்யச்சொல்லி கண்டு பிடிக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. அவர் இரண்டு வருடம் முன்பு வாங்கிய கண்ணாடியை வைத்து புதிதாய் வாங்கியைதைத் தேடிக் கொண்டிருக்கிறார்

      Delete
  4. வீட்டுக்கு வந்தவரின் கதையை
    விருப்பமின்றி சொன்னபோது நானும்
    விட்டுவிட்ட பொருள் கணக்கை
    விபரமாகச் சொல்ல முடியவில்லை

    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது எல்லோருக்கும்போல குற்ற உணர்ச்சிதான்

      Delete
  5. Replies
    1. ஹுஹும். தேடிக்கொண்டே இருக்கிறார்

      Delete
  6. கண்ணாடி மாட்டிக்கிட்டு நல்லா தேடித் பாருங்க ..தேடுவது எதுவுமே கிடைக்காமல் போகாது !

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க உதவி செய்யுங்க

      Delete
  7. கண்ணாடி மாட்டிக்கிட்டு நல்லா தேடித் பாருங்க ..தேடுவது எதுவுமே கிடைக்காமல் போகாது !

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க உதவி செய்யுங்க

      Delete
  8. நானும் இதுப்போல தேடுவதுண்டு என் பையனையும் பொண்ணையும் தேடி தர சொல்லி இம்சிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே வயசுக் கோளாறுதானா? தெரியவில்லை

      Delete
  9. // வீட்டுக்கு வந்தவரின் கதையை
    விருப்பமின்றி சொன்னபோது நானும்
    விட்டுவிட்ட பொருள் கணக்கை
    விபரமாகச் சொல்ல முடியவில்லை //

    நெகிழ்ச்சியான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடித் தொலைந்தது பிரச்சனையாகி கணவன் மனைவிக்குமே வேறுபாடு சண்டைவேறு

      Delete
  10. கவியாழியாரே! நீங்கள் செய்வது நியாயமா? கண்ணாடியைத் தொலைத்தவன் நான்; கவி எழுதிப் பேர் வாங்குவது நீங்களா? அடுக்குமா அய்யா? – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. உங்க கண்ணாடி கிடைத்தப்பின் வாபஸ் வாங்கிகிறேன்

      Delete
  11. //மூன்று வயது நினைவுகூட
    முந்திக் கொண்டு வருகிறது
    மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
    மூடிப்போன இடம் தடயமில்லை//
    ரசித்த வரிகள்!

    ReplyDelete
  12. ஞாபக மறதி எனக்கும் உண்டு.. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நீங்களும் ராஜி அக்காவைப் போலவா?

      Delete
  13. கண்ணாடியை எங்காவது வைத்து விட்டு சமயத்தில் தேடுவோம்! கவிதையாய் தவிப்பை பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கும் நன்றிங்க சுரேஷ்.

      Delete
  14. //மூன்று வயது நினைவுகூட
    முந்திக் கொண்டு வருகிறது
    மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
    மூடிப்போன இடம் தடயமில்லை
    //- ரசித்த வரிகள். ஞாபக மறதி அனைவர்க்கும் பொதுவான ஒன்று.. காரணம் அவசரம்தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மாணவர்களுக்கே இப்போது மறதிநோய் அதிகமாகிவிட்டதே

      Delete
  15. எல்லா கண்ணாடிக்காரர்களுக்கும் உரிய
    பிரச்சனைதான். ஆனால் எல்லோராலும்
    இப்படி இதனைப்போல் படைப்பாக்கிவிடமுடியுமா என்ன ?

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற நண்பரின் உள்ளக் குமுறலே கவிதையாகியது

      Delete
  16. உங்கள் கவிதைகளின் தரம் கூடிக் கொண்டிருக்கிறது. இந்தவாரம் தமிழ்மண முதல் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  17. பேயறைந்த முகத்தைப் பார்த்து
    பேரன் பேத்திச் சிரிக்கிறார்கள்
    பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
    பேருதவி மனைவியும் செய்கிறார்கள்

    இரண்டு கண்ணாடிகள் தேவை..

    பார்ப்பதற்கும் ,படிப்பதற்கும் ஒன்று...
    மர்றொன்று கண்ணாடியை தேடுவதற்கு...!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதானுங்கம்மா

      Delete
  18. //நாவறண்டு கத்தினாலும் முடியாது
    நாநயமாய் பேசினாலும் வந்திடாது
    நான்வைத்த இடத்தைக் காணாமல்
    நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது//

    அசாத்தியமான அற்புதமான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீங்க சொன்னா சரிதான்

      Delete
  19. //மூன்று வயது நினைவுகூட
    முந்திக் கொண்டு வருகிறது
    மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
    மூடிப்போன இடம் தடயமில்லை//

    கலக்குறீங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா ? நன்றிங்க தம்பி

      Delete
  20. வாழ்க்கையின் நடப்புகளை படைப்புகளாகத் தருபவரே உண்மையான படைப்பாளி. அந்த வகையில் சும்மா பூந்து விளையாடுறீங்க அய்யா. தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும் (அடுத்தவர் தொலைத்தா இருக்கத் தானே செய்யும்) வரிகள் ஞாபகம் வருகின்றன. பகிர்வுக்கு நன்றி அய்யா..

    ReplyDelete
    Replies
    1. அவர்களேஅப்படிங்களா நண்பர் பாண்டியன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  21. தங்களுக்கும் நன்றி

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more