தெய்வங்கள்

தெய்வங்கள்

இதழன்றி என்ன தருவாய்? அன்பே!



 Photo: மழையில் கூட 
தீவைக்கிறது 
உன் தீண்டல்கள்..

-சம்யுக்தா

 
அருகில் வராதே அணைத்து கொள்வேன்
அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன்
அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு
அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும்

இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன்
இதை மறுத்தால் என்ன செய்வேன்
இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக
இதழன்றி  என்ன தருவாய்  அன்பே

என்னை மீறி எதுவும் நடந்தால்
எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு
பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை
பிணைப்பை உண்டென உணர்ந்திடு

நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ
கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய்
துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை
வஞ்சியே வா வனப்பிதழைத்தா !



Comments

  1. நல்லாயிருக்கு... ஆனாலும் ஒரு சந்தேகம்

    தோற்றும் - தோன்றும் ; என்னை - என்ன; பினக்கின்றி - பிணக்கின்றி;


    அப்படீன்னு அச்சாயிருக்கணுமோ...?

    ReplyDelete
  2. நன்றி நண்பரே -அவசரத்தில் அப்படியே பதிவு செய்து விட்டேன் இனி சரிசெய்துகொள்கிறேன்

    ReplyDelete
  3. அழகோ....அழகு


    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more