தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால்
அன்றாடக் காற்றும் மறைக்குது
ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால்
அதற்காகப்  பணமும் கரையுது

மழையும் பெய்யவில்லை அதனால்
மரங்களில் பச்சை செழுமையில்லை
மதிய வேளையிலே எல்லோருக்கும்
மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை 

ஏழையும் மனதால் வருந்தி
எங்குமே செல்ல இயலவில்லை
ஏர்பிடிக்க ஆசை இருந்தும்
ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை

எப்போது மழை வருமோ
எல்லோரின் மனம் மகிழுமோ
தப்பாக மரம் வெட்டியதால்
தண்டனை இப்போதே உள்ளது 

இப்போதே எல்லோரும் யோசியுங்கள்
இருக்கிற இடத்தில் மரங்களை
இரண்டிரண்டு நட்டு வளருங்கள்
இதையே எல்லோருமே சொல்லுங்கள்

எல்லோரும் நன்றாக யோசித்தால் 
எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்
சொல்லாலே நில்லாமல் செயலில்
செய்தாலே மழையும் வருமே 

----கவியாழி

Comments

  1. மழை மட்டுமல்ல... இங்கு மின்'சாராமும்' சரிவரயில்லை...

    From Friend's LT

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்ப தைரியசாலி தனபாலன்.

      Delete
  2. ரொம்ப வலிக்கும் வரிகள்

    // ஏர்பிடிக்க ஆசை இருந்தும்
    ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை//

    குழந்தைகளுடன் பகிர்ந்தேன்..(வகுப்பில்)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே இனியும் இதுபோலவே எழுதுவேன்

      Delete
  3. கேள்வியும் நாமே பதிலும் நானே...

    கேள்விகள் கேட்பதை விடுத்து தீர்வை தீர்மானித்தால் எல்லாம் நலமே....

    அழகிய கவிதை...

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே இதைச் செய்வோம்

      Delete
  4. இங்கு பெங்களூரில் மாலை நாளை
    மணியிலிருந்தே குளிர் வாட்டுகிறது
    ஒவ்வொரு இடத்திலும்
    ஒவ்வொரு விதமானப் பிரச்சனை
    உங்களைப் போல் எங்களால் அதைச்
    சரியாகச் சொல்லத் தெரியவில்லை
    பகிர்வுக்கு தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது .வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  5. "இருக்கிற இடத்தில் மரங்களை
    இரண்டிரண்டு நட்டு வளருங்கள்" என்ற
    மதியுரையை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வரவேற்ப்புக்கும் நன்றிங்க

      Delete
  6. எப்போது மழை வருமோ
    எல்லோரின் மனம் மகிழுமோ

    எல்லோரும் நன்றாக யோசித்தால்
    எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்
    சொல்லாலே நில்லாமல் செயலில்
    செய்தாலே மழையும் வருமே

    மனம் மகிழ மழை வரட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையைப்போல் மழையும் நன்கே வரட்டும்

      Delete
  7. உண்மைதான் மரங்களை வெட்டிவிட்டு மழையை குறை சொல்லி பயனில்லை! மரங்களை நடுவோம் மழைபெறுவோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.சுரேஷ் இப்போதே செய்தால் எப்போதும் மனித இனம் வாழும்

      Delete
  8. இயற்கையும் பொய்க்கின்றது
    இடர் மிகுந்தோர் செயல்களால்...

    வருத்தமும் ஆதங்கமுமான கவிவரிகள்!

    சிறந்த சிந்தனை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  9. மரம் நடுவோம் .மழை பெறுவோம்.என்பதை அழகிய கவிதையாக்கி விட்டீர்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  10. கவிஞர் கவிதை எழுதிய நேரம் இங்கு மழை தொடங்கி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா மிக்க மகிழ்ச்சியே,தங்களின் வரவைப்போல.நன்றிங்க

      Delete
  11. மரம் இருக்கும் வரைதான்
    மனிதன் இருப்பான்
    இதை அறியாது
    உணராது
    செயல்படுபோர்
    இனியாவது திருந்தவேண்டும்
    மரம் நடவேண்டும்
    அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .நன்றிங்க ஜெயக்குமார் அவர்களே.

      Delete
  12. கவிதை அருமையாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பாமரன் அவர்களே

      Delete
  13. நல்ல சிந்தனை..... எதிர்காலத்திற்காவது பலன் தர மரம் நடுவோம்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more