தெய்வங்கள்

தெய்வங்கள்

பனிபொழியும் அதிகாலை


நிலவும் சூரியனும் சேர்ந்து
நித்திரையில் கனவில் வந்த
நீலக்கண் கோலமங்கை
இவளென்று சண்டையிட்டதால்
பூமிக்கே  வேர்வை வந்ததால்
புல்லெல்லாம் நனைந்து விட்டதோ

பனிபொழியும் அதிகாலையில்
பருவமங்கை  நடந்துந்துவர
முகம்  தெரிய வேண்டாமென
அதிகாலை வராமல்
கதிரவனையே காக்கவைத்து
காலம் மாறி வியந்து  வந்ததோ

மார்கழிப் பூக்களின்
மௌனமான பூக்கும் சத்தமமும்
மலைச்சாரல்  தூறல்போல
பனித்துளியும்  முகமலர்ந்து
மங்கையால் மயங்கி நின்றதோ




Comments

  1. வித்தியாசமான அருமையான அழகான கற்பனை
    வார்த்தைப் பிரயோகங்கள் கவிதைக்கு
    கூடுதல் அழகு சேர்க்கிறது
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பணியில் நனைவதுபோல் உங்களின் கருத்தால் பரவசமடைகிறேன்

    ReplyDelete
  3. கொட்டும் பனியில் நனைந்தீர்களா? செய்யும் பணியில் நனைந்தீர்களா?ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. கவிதை மழையில் நனைந்துவிட்டேன்.வருகைக்கு நன்றி

      Delete


  4. // நிலவும் சூரியனும் சேர்ந்து
    நித்திரையில் கனவில் வந்த
    நீலக்கண் கோலமங்கை
    இவளென்று சண்டையிட்டதால்
    பூமிக்கே வேர்வை வந்ததால்
    புல்லெல்லாம் நனைந்து விட்டதோ//

    நல்ல கற்பனை! அழகு!

    ReplyDelete
  5. கதிரவனையே காக்கவைத்து
    காலம் மாறி வியந்து வந்ததோ

    அத்தினையும் அழகான வரிகள் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தம்பி வருகைக்கு நன்றி

      Delete
  6. கதிரவனையே காக்க வைக்கும் வரிகள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நட்பே நீங்க வந்ததே மகிழ்ச்சி

      Delete
  7. பனி உருகி கவிதையாக கொட்டிவிட்டதோ! அருமை.

    ReplyDelete
  8. ஆம் நட்பே விடியலை தேடி எழுதினேன்

    ReplyDelete
  9. //மௌனமான பூக்கும் சத்தமமும்//
    ஆகா!
    வளமான கற்பனை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  10. பனிபொழியும் அதிகாலை கவிதையாய் அழகு .........

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more