தெய்வங்கள்

தெய்வங்கள்

கவிதையின் மகளோ?



செப்பு சிலையா
செதுக்கியவன் கலையா
நித்திரையை கலைக்கும்
நீலக் குயிலா
கற்பனையை தூண்டிவிட்ட-நீ
கவிதையின் மகளோ

மேகமெல்லாம்  கூடிநின்று
மேனியெல்லாம் நடுநடுங்க
இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க
இந்திரனே இறங்கி வந்து-உன்னை
இணையாகி மகிழ்வானோ

புரவிக்கூட்டமென புறப்பட்ட
தேனீக்கள் தடம்மாறி நிற்பது
உன்னுடல் வாசம் உறுத்தியதோ
உன்னையே பூவாக நினைத்து-உடனே
தேன்குடிக்க எண்ணியதோ

கன்னியுன்னை காணவேண்டி
கதிரவனே வருன்முன்னே
கண்டுவிட்ட என்னோடு
கண்ணசைத்து வருவாயா-என்
கட்டுடலை அணைப்பாயா

Comments

  1. கவிதையின் மகள் அழகு !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க, பெண்களே இதுபோன்று ரசனையைரசித்து கருத்து சொல்லி இருப்பது எனக்கு பெருமை

      Delete
  2. அழகான கவிதை...
    மெட்டுப் போட்டால் அழகான கிராமியப் பாடலாகவும் உருவாக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,மேட்டுபோட்டால் இன்னும் நன்றாக எழுதுவேன்

      Delete
  3. நல்ல கறபனை வளம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தொடர்ந்து படியுங்க கருத்த பதியுங்க

      Delete
  4. புரவிக்கூட்டமென புறப்பட்ட
    தேனீக்கள் தடம்மாறி நிற்பது
    உன்னுடல் வாசம் உறுத்தியதோ
    உன்னையே பூவாக நினைத்து-உடனே
    தேன்குடிக்க எண்ணியதோ...

    அருமையான வர்ணனை.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா இன்னும் வரும் படிங்க

      Delete
  5. ''..மேகமெல்லாம் கூடிநின்று
    மேனியெல்லாம் நடுநடுங்க
    இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க
    இந்திரனே இறங்கி வந்து-உன்னை
    இணையாகி மகிழ்வானோ..''
    நல்ல கற்பனை.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி,தொடர்ந்து படியுங்கநன்றிங்க

      Delete

  6. புரவிக்கூட்டமென புறப்பட்ட
    தேனீக்கள் தடம்மாறி நிற்பது
    உன்னுடல் வாசம் உறுத்தியதோ
    உன்னையே பூவாக நினைத்து-உடனே
    தேன்குடிக்க எண்ணியதோ//

    கற்பனையும் சொல்லிச் சென்ற விதமும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்//

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் ,நீங்களெல்லாம் வாழ்த்தும்போது எனக்கு இன்னும் நல்ல படைப்புகளை தரணும்னு தோணுது

      Delete

  7. தேன்போல கவியெழதி
    தினமும் தள்ளுகின்றீர்
    மான்போலத் துள்ளி
    மனதை அள்ளுகின்றீர்

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வான்மழை போல் நீங்கக் வந்தெனக்கு
      வாழ்த்தை வாரி வழங்குவதால்
      தேன் போல் என்னால் கவிதையை
      எழுத முடிகிறது

      நன்றி ஐயா

      Delete
  8. அருமையான கற்பனை வரிகள் கலக்கல். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மீண்டும் வரும் மீண்டும் மீண்டும் ரசியுங்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more