தெய்வங்கள்

தெய்வங்கள்

மழலையின் சிரிப்பு மத்தாப்பு



மத்தாப்பு பூத்ததுபோல்
மழலையின் சிரிப்புதனை
தப்பாக பேசமுடியுமா
தவறாக சொல்லலாகுமா

கத்தாளை உடம்புபோல
காட்சியாக இருந்தாலும்
கருப்பாக வழுக்கையாய்
தூங்குமூஞ்சி ஆனாலும்

சிட்டாக தாவிவரும்
சிறுநீரை கழித்தாலும்
மொட்டான மலர்களை
திட்டத்தான் இயலுமா

பூவைத்து பொட்டிட்டு
புதுசட்டையும் போடாமல்
புன்சிரிப்பாய் ஓடிவரும்
பிள்ளைகளை பார்த்ததும்

தொல்லைகளை மறந்து
தோளில் சுமத்தியதும்
மனதில் மகிழ்ச்சியை-யாரும்
மறைக்கத்தான் முடியுமா

Comments

  1. எதுவுமே முடியாது...

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் இணைத்தாயிற்று... (+1) நன்றி...

    ReplyDelete
  2. சோதரா! மழலைகள் போன்ற அழகான கவிதந்தீர்கள்.
    அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்பல...

    மணமென்றும் தருமே வாடாமலரே
    மழலைகள் சிந்தும் சிரிபிற்கெதுநிகரே...

    ReplyDelete
    Replies
    1. மழலைகள் சிந்தும் சிரிப்பிற்கேதுநிகரே...// உண்மைதான் சகோதரி

      Delete
  3. மழலை சொல் பிடிக்காதவரால் முடியும்

    ReplyDelete
    Replies
    1. யார் மறுப்பார் மழலையை.நீங்க வந்ததுக்கு நன்றிங்க

      Delete
  4. கவிதையில் மயங்கினோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more