தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

கெடுத்து  வாழ்வதால்
கிடைக்காது நட்பு
கொடுத்து வாழ்வதால்
குறையாது அன்பு
               *****
உழைப்பவன் வாழ்வு
ஊமையாகி விடாது
உழைக்காமல்  என்றும்
உயர்ந்துவிட முடியாது
               *****
நேர்மையாய் வாழ்பவன்
நிம்மதியாய் தூங்குவான்
நெறிகெட்டு வாழ்பவன்
நீண்ட நேரம் தேடுவான்
                *****
ஏழைக்கு கிடைக்கும்
எப்போதும் நிம்மதி
என்றெண்ணி வாழ்வதாலே
ஏற்றமில்லை சந்ததி
               ******
கூட்டுக் குடும்பம்
குலம் சிறக்க வாழும்
கூடாவிட்டால் ஒற்றுமை
நெறிகெட்டுப் போகும்
             *****
கற்றக் கல்வி
கடைசிவரைக் காக்கும்
கற்காவிட்டால் அதுவே
காலங்காலமாய் ஏக்கம்
             ******

(கவியாழி)

Comments

  1. வணக்கம் சகோதரரே... அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    சின்னஞ்சிறிதென்று இங்கு சிதறிய வித்து
    பென்னம்பெரியதாக பகர்ந்ததே சத்து
    முன்னம் உரைத்த அருமையான முத்து
    இன்னும் ஏதுஉண்டு? அத்தனையும் சொத்து!.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவிதை அதைவிட அருமை.மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. கற்றக் கல்வி
    கடைசிவரைக் காக்கும்
    கற்காவிட்டால் அதுவே
    காலங்காலமாய் ஏக்கம்

    உண்மைதான் நண்ப!

    ReplyDelete
    Replies
    1. நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி அய்யா

      Delete
  3. சின்னஞ்சிறு விதைகள் முளைத்து வளர்ந்து மரமாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  4. கற்றக் கல்வி
    கடைசிவரைக் காக்கும்
    கற்காவிட்டால் அதுவே
    காலங்காலமாய் ஏக்கம்//
    //
    உண்மை ! நன்றாக சொன்னீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.நாட்டில் நடப்பதைத்தானே சொன்னேன்

      Delete
  5. அருமையாக முடித்துள்ளீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றிங்க தனபாலன்.

      Delete
  6. யாரால் நிம்மதியாக தூங்க முடியும் அருமையா சொல்லிடீங்க

    ReplyDelete
    Replies
    1. அவசியமான அனைத்தையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  7. சரளமான வார்த்தைப் பிரயோகத்துடன்
    அருமையான கருத்துடன் கூடிய
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சார்

      Delete
  8. கெடுத்து வாழ்வதால்
    கிடைக்காது நட்பு
    கொடுத்து வாழ்வதால்
    குறையாது அன்பு

    அழகிய கவிதை ..........வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கு நன்றிங்க சீராளன்

    ReplyDelete
  10. மனதில் விதைத்த விதைகள்
    வித்தக‌ கவிதைகள்...அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நீங்க வந்ததுக்கும் கருத்துத் தந்ததுக்கும்

      Delete
  11. சின்னஞ்சிறு விதைகள் ஆலமர விழுதாய் பதிந்தது மனதில் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சசிகலா .தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  12. Replies
    1. நன்றிங்க ராமலக்ஷ்மி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more