தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதோ எண்ணியதை
எழுதியதை மறக்காமல்
இப்போது எழுதுகிறேன்
இளமையின்றி  ஏங்குகிறேன்

வாழ்க்கை ஓட்டத்திலே
வெற்றிபெற ஓடிக் கொண்டே
வாய்த்த வாய்ப்புகளை
வழிதவறி விட்டுவிட்டேன்

அப்போது எண்ணவில்லை
அதற்குமே நேரமில்லை
அந்தகாலமும் முடிந்ததால்
அதற்குமே வேலையில்லை

தப்பாக நினைப்போரே
தரமறிந்துப் பார்ப்போரே
முப்போதும் காதலுக்கு
முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதும் மகிழ்ச்சியாய்
எண்ணமதை வைத்திருக்க
தற்போதே எழுதுகிறேன்
தவறிருந்தால் மன்னிப்பீரே

கண்குளிரப் படித்திடவும்
கவிஎழுதி முடித்திடவும்
காதலிக்கத் தமிழுண்டு
காலமெல்லாம் மகிழ்வுண்டு

Comments

  1. தமிழின் மீதான காதல் ஈரேழு ஜென்மத்திலயும் மாற வேணாமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராஜி.நீங்கள் சொன்னபடியே இருக்கத்தான் ஆசை

      Delete
  2. தமிழ்மணத்துல இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்

    ReplyDelete
  3. /// காதலிக்கத் தமிழுண்டு
    காலமெல்லாம் மகிழ்வுண்டு... ///

    சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்

      Delete
  4. அருமையான கவி வரிகள்!
    எங்கேயும் எப்போதும் எதிலும் காதல் இருந்தால்தான் வாழ்க்கையை ரசிக்கமுடியும்.

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. இளமைதிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

      Delete
  5. கண்குளிரப் படித்திடவும்
    கவிஎழுதி முடித்திடவும்
    காதலிக்கத் தமிழுண்டு
    காலமெல்லாம் மகிழ்வுண்டு

    மகிழ்வு நிலைக்கட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நிலைக்கும் நிம்மதியும் உங்களைப்போல் கிடைக்கும்

      Delete
  6. தமிழை காதலிக்க வயதில்லை! சிறப்பான படைப்பு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே அன்னையவள் .வருகைக்கு நன்றி

      Delete
  7. வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியில்லை என்பது
    தமிழுக்கு இல்லைதானே
    தமிழும் நம் மனம் போல
    எப்போதும் இளமையானதுதானே ?
    மனம்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் உங்கள் வருகைக்கும் நன்றிங்க சார்.நீங்கள் சொன்னதுபோல் இளமை இளமை !!

      Delete
  8. காலமெல்லாம் உங்கள் காதல் வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. யாராலும் மறுப்பு சொல்லமுடியாது எல்லோரும் வாழ்த்தத்தான் வேண்டும்

      Delete
  9. ***எப்போதோ எண்ணியதை
    எழுதியதை மறக்காமல்
    இப்போது எழுதுகிறேன்
    இளமையின்றி ஏங்குகிறேன்.****

    காதலுக்கு முடிவுண்டானு நான் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து பார்க்க முடியாது. அதனால் தெரியவில்லை! :)

    ஆனால் உங்க இளமை போயிட்டாலும் உங்க காதல் கவிதை இன்னும் இளமையாகவு அழகாகவும்தான் இருக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு முதுமையில்லை வாழுங்கள் நான் உங்களை வாழ்த்துகிறேன் முனிவர்கள் ரிஷிகள் இன்னும் வாழ்வதாக சரித்திரம் சொல்கிறது நீங்கள் ஆய்வு செய்யும் உடல்கூறுகளில் அப்படி மாற்றம் செய்ய முடிந்தால் முடியுமே.ஆயிரம் ஆண்டுகள் வாழ நான்வாழ்த்துகிறேன் அப்புறம் சொல்லுங்கள்

      Delete
  10. எந்தக் காதலுக்குமே கால நிர்ணயம் கிடையாது! ! ரசிக்கும்படி இருக்கிறது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தமிழைக் காதலிக்க வயதும் அதிகமில்லை,வருகைக்கு நன்றிங்க

      Delete

  11. உண்மையுடன் நம்பிக்கையுடன் பழகும்
    உள்ளங்களுக்கு
    காதலுக்கு முடிவில்லை காணும்...
    காதலுக்குச் சாவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .நமக்கெலாம் காதல்கொண்ட தமிழால் காதலித்துக் கொண்டே இருப்போம் காலம் முடியும்வரை.

      Delete
  12. காதலுக்கு ஏது முடிவு ஐயா?
    அதுவும் தமிழ்க் காதல் மிகுதியாகுமே தவிர குறையாது..பின்பு எப்படி முடிவு வரும்.. நல்ல கவிதை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இறுதிவரை துணைக்குவரும் தோழன் எப்படி மறக்க முடியும் தொடரும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more