தெய்வங்கள்

தெய்வங்கள்

புனிதக் கல்விப் பணிசெய்விரே....

மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி
மக்களின் செயலை முறைப்படுத்தி
மானுடம் போற்றி வளப்படுத்தி
மனதைக் காப்போம் திடப்படுத்தி

நல்லோர்  பலரின் சொல்லையுமே
நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே
கல்வியில் சிறந்த மாண்பையுமே
கற்றதில் நல்லதை போற்றுவோமே

இல்லா நிலையில் உள்ளவர்க்கும்
இனிதே கல்வியை தொடர்பவருக்கும்
பொல்லா பணத்தை கொடுக்காமல்

ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
உயரும் வழியைக் காட்டுங்கள்
உழைத்தே சிறக்கும் நல்வழியை
உயர்வாய் சொல்லித் தாருங்கள்

இளையோர் இன்றும் நேர்மையதை
இனிதாய் போற்றி வாழ்கின்றனர்
துணையாய் படித்த கல்வியது
தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ

Comments

  1. கல்வியின் பெருமைதனைச்
    சொன்னவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் முதலில் வந்தமைக்கும் நன்றிங்க சார்

      Delete
  2. கல்வி வாணிகமாகி பல நாள் ஆய‍்யிற்று!

    ReplyDelete
    Replies
    1. உங்க காலமெல்லாம் மீண்டும் வராது.இப்போது வணிகமயமாகிவிட்டது

      Delete
  3. சிலர் கல்விதனை பணம் காய்ச்சும் மரமாக நினைத்து ஈரக்கொலையை அறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்..!

    கல்வியின் மாண்பு உங்கள் கவிதையில் புரிகிறது அண்ணே...!

    ReplyDelete
    Replies
    1. இந்த உண்மையும் புரிஞ்சுகிட்டீங்க தம்பி.இவங்களை யாராலும் மாற்ற முடியாது காரணம்.வியாபாரம்

      Delete
  4. அரசாங்க நடத்த வேண்டிய கல்வித்துறை தனியார்க்கு தாரை வார்த்து கொடுத்ததால் அத்துறை இன்று பலத்த லாபம் கொழிக்கும் தொழிலாகிட்டு..,

    ReplyDelete
    Replies
    1. கொள்ளையடிக்கும் தொழிலாகவே செய்கிறார்கள்

      Delete
  5. சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  6. கல்வியின் சிறப்பினையும் அதைக்காக்கும் வழியினையும்
    இனிய கவிவரிகளில் அருமையாகச் சொன்னீர்கள்.
    மிகச்சிறப்பு.
    வாழ்த்துக்கள்!

    த ம.7

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.

      Delete
  7. ''...ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
    உயரும் வழியைக் காட்டுங்கள்!...'''
    மிக நல்ல வரிகள்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  8. அழகான வரிகள்...

    நல வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க கடல்.சுரேஷ் அவர்களே

      Delete
  9. கல்வியின் சிறப்பை இதை விட சிறப்பாய் சொல்லத்தான் முடியுமா? அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சுரேஷ்

      Delete
  10. ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
    உயரும் வழியைக் காட்டுங்கள்
    உழைத்தே சிறக்கும் நல்வழியை
    உயர்வாய் சொல்லித் தாருங்கள்//

    ஆம் , இது தான் முக்கியம்.
    படிப்புடன், ஒழுக்கமும் கற்றுத்தர பட வேண்டும்.
    நன்றாக சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  11. ஆம் உண்மைதான் ஆனால் காசு,பணம்,மணி மணி... இப்படித்தான் இருக்கிறது கல்வியின் தரம்

    ReplyDelete
  12. கல்வியின் பெருமை அருமை. நன்றி

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வது போன்ற கல்வி முறை சிறப்புதான்.. ம்ம் என்ன செய்வது தற்காலத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்தில் சேர்த்து இயந்திரங்களை அல்லவா திரும்ப பெறுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. உலகமும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது அதுபோல் நாமும் மாறித்தான் ஆகவேண்டும்.நல்லதை நாம்தான் சொல்லித்தரவேண்டும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more