தெய்வங்கள்

தெய்வங்கள்

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை
அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை
ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை
அதற்குமே யாருக்கும் கவலையில்லை

காலங் கடந்து  திண்பதும்
கறியும் கொழுப்பும் உண்பதும்
கடையில் கூடி பேசிக்கொண்டே
கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்

விற்பனையில் முன்னாக வருவதற்கு
வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு
எத்தனையோ மருந்துகள்  உள்ளது
எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு

கற்பனைச்  செய்தாலும் குறையாது
கண்டபடியும் சுருக்கவும் முடியாது
கைவீசி நடப்போரை கடந்து
கனதூரம் செல்லவே  இயலாது

பட்டினிப் பசியாய் கிடந்து
பழக்குவோம் உடலைக் குறைத்து
பாட்டன் பாட்டி உடலைபோல
பாதுகாப்போம் உடல் இளைத்து

தினமும் காலையில் நடந்தே
தண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே




Comments

  1. அருமையாச் சொன்னீர்கள்... நடைமுறைப்படுத்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருக வருக வணக்கம் .உங்கள் வரவு நல்வரவாகுக

      Delete
  2. உடல் ஆரோக்கியம் பற்றிய அருமையான கவிதை.... ஆமா நீங்க எப்போ உடம்பைக் குறைக்கப்போறீங்க சார் ?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அப்புறம்.

      Delete
    2. தம்பி
      எனக்கு
      வரும்சூலை பதி
      னொன்றாம்தேதி 52வது பிறந்தநாள்
      உங்க வயது என்ன

      Delete
  3. குண்டுத் தொல்லை குறையத் தானில்லை.
    நீங்கள் சொன்ன வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எல்லோருமே யோசிக்க வேண்டியது.வருகைக்கு நன்றிங்க

      Delete
  4. ஆரோக்கிய கவிதை. பின் பற்றினால் நலமே நாளும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எல்லோருக்குமே தேவை ஆரோக்கியமே

      Delete
  5. அருமை அருமை
    அவசியமான கருத்தை
    அழகுபடச் சொல்லும் உங்கள் பாணி
    அனைவரையும் கவர்வது இயற்கைதானே
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  6. நடை பயிற்சி, உணவு கட்டுபாடு தேவைதான் நீங்கள் சொல்வது போல். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் இருந்தால் நல்லது என்கிறார்கள். அதை நாம் கடைபிடித்தால் நல்லது.
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. எங்க முடியுது .நாக்கை கட்டுப்படுத்தினால்தான் முடியும்.வருகைக்கு நன்றி

      Delete
  7. என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ...தொப்பையைப் பற்றி நான் பதிவு போட ...நீங்களும் இன்று குண்டு தொல்லைப் பற்றியே !

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா? பொதுநன்மைக்காக சேர்ந்துள்ளோம்

      Delete
  8. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தெளிந்த எண்ணம் இருந்தால் இளைத்தல் சாத்தியமே... உடல்நலம் பேணுதல் குறித்து நல்ல சிந்தனைகளை விதைத்த அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க கீதமஞ்சரி

      Delete
  9. உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டதா ?
    எல்லோருக்கும் பொருந்தக்கூடியதும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் சேர்த்துதான் ,வருகைக்கு நன்றி

      Delete
  10. "காலங் கடந்து திண்பதும்
    கறியும் கொழுப்பும் உண்பதும்
    கடையில் கூடி பேசிக்கொண்டே
    கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்" என்று
    அழகாக அடுக்கிய அடிகளுக்கு
    "குண்டுத் தொல்லை குறையவே இல்லை" என்ற
    தலைப்பும் எடுப்பாக இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா. இன்னும் வரும் இனிமை தொடரும்.வருகைக்கு நன்றி

      Delete
  11. இளைத்திடுங்கள் உடற்பருமனையென
    இனித்திடும் கவி சொன்னீர்
    உளைத்திடவேண்டும் யாவரும்
    பணத்துடன் நம் நலத்துக்கும்!..

    சிந்தனைச் சிற்பியின் சிறந்த நற்கருத்துக் கவிதை அற்புதம்!
    நல் வாழ்த்துக்கள்!

    த ம.7

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ.

      Delete
  12. உண்மைதான்..கடைபிடிக்க வேண்டும்..நான் குறிப்பாக நேரத்திற்கு உண்பதை.. :)
    நல்ல கவிதை ஐயா

    ReplyDelete
    Replies
    1. நேரத்திற்கும் பசிக்கும் உண்ண வேண்டும் ருசிக்காக அல்ல.நன்றிங்கம்மா

      Delete
  13. உடல் நலம் பேணச்செய்யும் அருமையான விழிப்புணர்வு கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  14. நன்றே சொன்னீர்! இன்றே செய்வீர்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா.நன்றாய் சொன்னீர்கள் நன்றி அய்யா

      Delete
  15. பசித்தபின் புசி என்றார்கள்
    கடைபிடிக்கத்தான்
    இயலவில்லை.
    கவிதை நன்று சொன்னீர்
    இனியாவது முயல்வோம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உணவே மருந்து.பசிக்குத்தான் உணவு ருசிக்கு அல்ல என்பதை அறிந்தாலே போதும்.வருகைக்கு நன்றிங்க

      Delete
    2. வருகைக்கு நன்றி

      Delete
  16. // தினமும் காலையில் நடந்தே
    தண்ணீர் நிறையக் குடித்தே
    திண்பதில் கொஞ்சம் குறைத்தே
    திடமாய் வாழலாம் செழித்தே //

    உண்மையிலும் உண்மை... பட் நான் இப்பத்தான் இதை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன்..

    ReplyDelete
  17. //தினமும் காலையில் நடந்தே
    தண்ணீர் நிறையக் குடித்தே
    திண்பதில் கொஞ்சம் குறைத்தே
    திடமாய் வாழலாம் செழித்தே// அருமையாய் உரைத்தீர்கள்..

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more