தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பர்கள் தினம்

ஊருமில்லை உறவுமில்லை
உடன்பிறந்த சொந்தமில்லை
பாசமான பந்தமில்லை
பிரிந்திடாத நட்பே உண்மை

தேவையென வரும் போதும்
தேடிவந்து உதவி செய்யும்
தோழமையின் தொடர் அன்பை
தொடரவுமே  நன்றி சொல்வோம்

நாளை முதல் நன்றியினை
நண்பருக்கு வாழ்த்து ரைப்போம்
நலவனாய் மாற்றிடவும் நாம்
நட்பாக தொடர்ந்து செல்வோம்

காலை மாலைக்  கைகூப்பி
கண்டவுடன் வாழ்த்து சொல்வோம்
கன்னியரும் காளையரை கண்டதுமே
கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம்

வேலை இந்த வேளையிலே
வேதனைகள் மறந்து சிரித்து
வேற்றுமையை தள்ளி வைப்போம்
வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்

Comments

  1. /// வேற்றுமையை தள்ளி வைப்போம்
    வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம் ///

    அருமையாச் சொன்னீங்க... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதானே? நண்பருக்கு நன்றி

      Delete
  2. வாழ்த்துகளை மட்டுமல்ல ,,,நாம த ,ம .ஓட்டுக்களையும் பகிர்ந்து கொள்வோம் ,சரியாய் சொன்னீங்க கவியாழி !

    ReplyDelete
    Replies
    1. எண்ணிக்கையில் வரவில்லையே?

      Delete
  3. நட்புக்கு கைகொடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.தோள் கொடுப்போம்

      Delete
  4. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நட்பை சொல்லி சென்ற கவிதை அருமை!!

    ReplyDelete
  6. பிரிந்திடாத நட்பே உண்மை.....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. எங்கள் நட்புத் தொடர்ந்திட நாமே வாழ்துரைப்போம் .
    மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நமது நட்பும் தொடரட்டுமே

      Delete
  8. ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவது போலவேதான்
    நல்ல நட்புக்களும் அமைவது.

    மனதில் நல்ல புரிந்துணர்வு இருந்தால் எப்பவும் நட்பு உடனிருக்கும்.
    அழகிய வரிகள்! எங்கள் நட்பும் என்றும் தொடரும்...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நண்பன் இருந்தால் நாளும் கஷ்டப்படலாம் கவலையில்லை

      Delete
  9. வேற்றுமையை தள்ளி வைப்போம்
    வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்//
    நட்பு கவிதை அருமை.
    வாழ்க நட்பு!
    வளர்க நட்பு!

    ReplyDelete
  10. நட்பின் ஆழத்தை சொல்கிறது கவிதை.
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  11. சிறப்பான நட்புக் கவிதை

    ".வேதனைகள் மறந்து சிரித்து
    வேற்றுமையை தள்ளி வைப்போம்
    வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்."

    ReplyDelete
    Replies
    1. ஏறக்குறைய பதினைந்து நாட்கள் கழித்து கருத்திட்டுள்ளீர்கள் நன்றி.நிச்சயம் மற்றதையும் பார்த்திருப்பீர்கள் நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more