தெய்வங்கள்

தெய்வங்கள்

இப்படியும் என்னை வாழ்த்தியோர்


அன்புள்ள நட்புகளுக்கு அடியேனின் வணக்கம்

கடந்த 24.04.2013 அன்று நான் எழுதிய 'நான் புலமை அறிந்தப் புலவனில்லை" என்ற கவிதைப் பற்றி கருத்து கூறியவர்களில் பலர் என்னை கவிஞரே ,பாவலரே,புலவரே என்றும் அருமையாக எழுதுவதாகவும்,தொடருங்கள் என்றும் எல்லா இலக்கணமும் உள்ளடங்கியுள்ளது என்றும் எழுத்துப் பிழை உள்ளதென்றும் முயற்சி தொடரட்டும் என்றும் வாழ்த்தியவர்கள் வணங்கியவர்கள் பலபேர் இருந்தாலும் கருத்தே கூறாமல் இருந்த நல்ல உள்ளங்கள், இனிய நண்பர்கள் நான் பெரிதும் மதிக்கும் நல்லோர்க்கும் எனது பணிவான வேண்டுகோள்" தொடர்ந்து படியுங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கரம்கூப்பி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன். மேலும் தளத்துக்கு பெயர் வேண்டும் என்ற காரணத்தினாலேயே கவியாழி என்று பெயர் வைத்து எழுதி வந்தேன். இந்தப் பெயர் வைக்க காரணம் கவிதையை ரசிக்கும் யாழின் இசை  ரசிகன் என்ற வரியின் சுருக்கமே "கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இனிமேல் எழுத உள்ளேன். எனவே தொடர்ந்து எனக்கு ஆதரவு தரவேண்டி வேண்டுகிறேன்.

மேலும் எனக்கு பொருத்தமான பெயரைச் சொன்னால் வணங்கி ஏற்றுக்கொள்வேன் மகிழ்வேன் கவியாழியோடு இணைத்துக் கொள்வேன்



Ramani S24 April 2013 17:
அருமையான கவிதை
இலக்கணம் தெரிந்தவர்கள் எல்லாம்
கவிதை இயற்றிட முடியாது
ஆயினும் கவிதை இயற்றிட ஆர்வம்
கொண்டவர்கள் இலக்கணம் கற்றுக் கொண்டு
கவிதை வடித்தால் சிறப்பாக இருக்கும்
அதுவும் இலக்கணம் அறிந்து பின்
இலக்கணம் மீறி கவிதைப் படைத்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்
முதலில் சைக்கிள் பழகுபவன்
ஹேண்ட் பார் பாலேன்ஸ் பண்ணத் தடுமாறி
பின் ஹேண்ட்பாரைத் தொடாதே சைக்கிள்
ஓட்டுதலைப்போல
இது என்னுடைய கருத்து
******************************************
திண்டுக்கல் தனபாலன்24 April 2013 12:33
கவிதைகள் பல எழுதி எல்லாத்துன்பங்களையும் மறையச் செய்க... வாழ்த்துக்கள்...
******************************************
இளமதி24 April 2013 12:46
சகோதரரே!...
நானும் உங்கள் மனநிலை, செயல் ஒத்தவளே...
மொழிப்பற்றும் ஆர்வத்தின் காரணமாகவும் எழுதுவதை பகிர்வதுண்டு.
இலக்கண இலக்கிய திருத்தங்களை அதில் தேர்ந்தவர்கள் உரைப்பார்கள்.

இங்கு உங்கள் கருத்தில் தவறெதுவும் என் அறிவிற்கு புலப்படவில்லை. எழுத்துபிழைகள்தான் அதுவும் கணனிதட்டச்சுவதில் ஏற்படுவது சிலசயம் தவிக்க முடியாமல் போகிறது. எனக்கு இப்பிரச்சனை உள்ளது.

மனஞ்சோராமல் தொடர்ந்திடுங்கள் உங்கள் பணியை. போகப்போக திருத்தம் வரும்.
வாழ்த்துக்கள் சகோ!
*****************************************
கி. பாரதிதாசன் கவிஞா்26 April 2013 00:48

வணக்கம்!

தமிழ்மணம் 10

எல்லாம் அறிந்தோர் எவரும் இலையென்பேன்!
வல்லோன் அடிகளை வாழ்த்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
****************************************************
அருணா செல்வம்26 April 2013 03:48
அருமையான கவிதை கரு.
கவிதைக்குக் கருத்துதானே முக்கியம்.

தொடருங்கள் கவியாழி ஐயா.
நானும் தொடருகிறேன்.
********************************************
Jeevalingam Kasirajalingam26 April 2013 05:01
ஐயா! அசை, சீர் பார்த்து
எதுகை, மோனை ஆடையுடுத்து
அடி, தொடை பிசகாமல்
அழகாய்ச் சொல்கிறீர்
"நான்
புலமை அறிந்தப் புலவனில்லை" என்று!
தங்கள்
அவையடக்கம்
பாராட்டத்தக்கது!
ஐயா!
எழுத்தை உழைப்பாக்க வேண்டாம்
உலகெங்கும் தூயதமிழ் பேண
எழுத்தை ஒரு பணியாகக் கொள்ளும்!
தவறின்றித் தமிழ் பரப்ப
உன் நண்பர்கள்
தோள்கொடுப்பர் பாரும்!
********************************************

ஹேமா26 April 2013 15:56
அவையடக்கம் ஐயா நிறையவே உங்களுக்கு.எத்தனை விஷயங்களைத் தொட்டுப் புனைகிறீர்கள் கவிதைகளை.வாழ்வின் சுவாரஸ்யம்,அனுபவம் காதல் எல்லாமே சிறப்புத்தான்.வாழ்த்துகள் உங்களுக்கு.உங்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி தொடர்கிறோம் !
********************************************** 
குட்டன்24 April 2013 20:30
கவியாழியே இப்படியென்றால் கற்றுக்குட்டிகள் என்ன சொல்வது!
**********************************************
Chellappa Yagyaswamy25 April 2013 07:55
“முனைவராய் நானே படித்தது மில்லை, முறையே தமிழைக் கற்றது மில்லை” என்கிறீர்களே, நண்பரே! இந்த இரண்டும் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு இந்த அளவாவது எழுத வருகிறது என்பேன். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசம் இது தானே! கண்ணதாசனுக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசமும் இது தானே! பட்டப் படிப்பும், முறையான இலக்கணப் படிப்பும் படைப்பாற்றலைத் திசை மாற்றிவிடும் தன்மை கொண்டவை என்பதற்கு இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் கூற முடியும். எனவே தொடர்ந்து எழுதுங்கள். நிறைய கவிதைகள் படித்துக்கொண்டே இருங்கள். தன்னிரக்கமும், அழுகுரலும் தவிருங்கள். ‘பாஸிட்டிவ்’ கவிதைகளையே எழுதுங்கள். இன்று நாட்டுக்குத் தேவையானது அதுவே!
**********************************************

ஆர்வமுடன் கவிதை எழுதும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரை!
*********************************************

S.டினேஷ்சாந்த்24 April 2013 14:57
உங்களுக்கு மட்டுமல்ல இங்கே கவிதை எழுதும் பலருக்கும் இக்கவிதை பொருந்தும்.நல்ல கவிதை
*********************************************
கோமதி அரசு24 April 2013 15:17
பணியால் முடங்கி போகும் போதும்
பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//
************************************************

கவிகவிதை வீதி... // சௌந்தர் //24 April 2013 12:27
கற்றது கைளயவு தானே....
அழகான தன்னடக்க கவிததை அருமை.
*************************************************
Tamizhmuhil Prakasam24 April 2013 15:20
அருமையான கவிதை ஐயா !!! உலகில் உள்ள அழகினை இரசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் சிறுமை கண்டு பொங்குபவர்கள் கவிஞர்களாவதில் அதிசயமேதுமில்லை. வாழ்த்துகள் !!!
*************************************************
கலாகுமரன்24 April 2013 15:56
புலமை மிக்க கவிதை.. வாழ்த்துக்கள்.
*********************************************

poovizi24 April 2013 18:21
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//

அருமை கவிஞ்சரே
******************************************** 
பட்டிகாட்டான் Jey24 April 2013 19:08
Arumai !
**********************************************
கிரேஸ்25 April 2013 08:10
//இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை
இலக்கியம் நாளும் படிப்பது மில்லை
வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ்
வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே// அது தானே நம் நாட்டுப்புறப் பாடல் ஐயா..இலக்கணம் இலக்கியம் எல்லாம் பார்த்தா பாடினார்கள்..நம்மில் கலந்திருக்கும் நம் மொழி எழுதவைத்திடும் அல்லவா? கவி அருமை.
***********************************************

மனோ சாமிநாதன்25 April 2013 18:13
மகிழ்வினில் எழுதும் கவிதையைக் காட்டிலும் வலியில் எழுதும்போது தான் கவிதை வரிகள் அழகாய் வந்து விழும். அதில் சத்தியமும் அழகும் சேர்ந்து வரும். அது போன்ற கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்!!

***********************************************
நல்ல உள்ளங்களுக்கு நன்றி


கவியாழி
சென்னை

Comments

  1. இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன்.

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. சும்மா இருக்கும்போதெல்லாம் நிறைய பெயர்கள் நினைவுக்கு வரும் .. இப்ப ஒன்னு கூட நினைவுக்கு வருவதில்லை .. வரும்போது சொல்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. உங்க பெரு என்ன உண்மைய சொல்லுங்க

      Delete
  3. //கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இனிமேல் எழுத உள்ளேன். //

    ஏன் ஐயா நீங்களும் தான் அழகாக கவி இயற்றுகிறீர்களே கவியாழி பெயரே சிறப்பு தான் அர்த்தம் இன்று தான் அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நீங்கள் விளக்கத்தை அறிந்து கொண்டு சொன்னமைக்கு நன்றிங்க

      Delete
  4. உங்கள் பதிவினில் இத்தனை தன்னடக்கம்!...
    உங்கள் உயர்ந்த எண்ணமும் அயராத முயற்சியும் தமிழார்வமும் மேலும் உங்களை உயர்த்தும்!

    //இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன்.//

    உங்கள் மனம்போல் அமையுங்கள் சகோ!

    வாழ்த்துக்கள்!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோ அப்படியே செய்கிறேன் அறிவுரையை ஏற்கிறேன் நன்றி

      Delete
  5. சரியான முடிவுதான்
    இனிய நட்பு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார்.உங்களுக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்

      Delete
  6. வணக்கம்!

    // கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன் //

    வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா.அப்படியே செய்கிறேன் .வாழ்த்துக்கு நன்றி

      Delete
  7. தமிழ் ஆழியில் மூழ்கி நிறைய கவிதை முத்துக்களை அள்ளித்தர வேண்டுகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்வேன் நிறைவாகத் தருவேன்

      Delete
  8. கவிதை கான விரும்புகின்றோம்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படிங்க .வருகைக்கு நன்றி

      Delete
  9. கழகக்கண்மணி என்று கும்மி பெயர் கொடுத்து சிறப்பித்ததே அதில் உங்களுக்கு உடன்பாடில்லையா கவிஞரே...!

    ReplyDelete
    Replies
    1. போதும் உங்க நிறுத்துங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more