தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே நீயும் நலமா?

நண்பனே நீயும் நலமா
நங்கையின் உடலும் சுகமா
பண்பனே ஏன் பதறுகிறாய்
பயனின்றி ஏன் அழுகின்றாய்

உன்துணை நண்பர்கள் இருக்க
ஊராரும் உறவுகளும் உதவ
பெண்துணை  பிணியும்தீரும்
பிறந்திடும் நல்கால முனக்கே

சிந்தனை முற்றும் மறந்திடு
சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு
கந்தனை கடம்பனை நினைத்திடு
கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு

இத்துணை மக்கள்  வாழ்கையில்
இல்லா துயரம் பார்த்தாயா
இதுவும் உனக்கு  சோதனையே
இனிமேல் தீர்த்திடும்  வேதனையே

தனமாய் தருவார் நண்பர்களே
தயவாய் இருப்பார் சொந்தங்களே
பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே
பிறகேன் கவலை வாழ்கையிலே

Comments

  1. Replies
    1. உண்மைதான் கவலையை மறந்தும் வாழலாம்

      Delete
  2. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்காக எழுதிய கவிதை என்று நினைக்கிறேன் ...அவர் சகோதரி பூரண நலம் பெறவும் ,நண்பர் மகிழ்ச்சியாய் இணையம் பக்கமாய் விரைவில் வர வேண்டுமென்று உளமாறவேண்டுகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. அவர் எழ வென்றும் எல்லோருக்கும் பயன் வேண்டும்

      Delete
  3. அழகான ஆறுதல் கவிதை !

    ReplyDelete
  4. எந்த நண்பனை நினைந்துருகி இக் கவிதை வடித்தீர்களோ அவர்களுக்கு
    நன்மையும் சேர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. இன்னல்கள் தீர்ந்து இனியவை மலர நானும் வாழ்த்துகிறேன்

      Delete
  5. உங்கள் நட்பின் ஆழம் கவியிலேயே தெரிகிறது...

    உங்களைப் போன்று நட்பினைப் பெற்ற உங்கள் நண்பர் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.
    கவலையை விடுத்து வேண்டுதலைத் தொடருங்கள் சகோ!

    அனைவருக்கும் நலமும் நன்மையும் பெருகிட நானும் உளமார வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் நலமாகவும் மனம் வளமாகவும் இருக்கவே விரும்புகிறேன்

      Delete
  6. அருமையான ஆறுதல் கவிதை
    உள்ளத்து உணர்வை அப்படியே கவியாய்ப்
    பதித்தவிதம் மனம் கவர்ந்தது
    அவர் துயரெல்லாம் கதிர் கண்ட பனியாய்
    நிச்சயம் தீரும்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நிம்மதி கிடைக்கும் நேர்மையும் செயிக்கும்

      Delete
  7. ஆறுதல் பெறட்டும் நண்பர் அழகிய கவிதையால்
    த.ம7

    ReplyDelete
    Replies
    1. எண்ணத்தில் உள்ளது எண்ணிக்கை வரவில்லையே

      Delete
  8. தகுந்த நேரத்தில் ஆறுதல் தரும் கவிதை. நண்பரின் துயரம் தீர வாழ்த்துகிறேன். கந்தன் அருளால் கவலைகள் தீர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தீரட்டும் நிம்மதி தழுவட்டும்

      Delete
  9. மனதை வருடும் வார்த்தைகளால் ஆறுதல் கூறியிருக்கிறீர்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து திரு தனபாலன் அவர்களின் சகோதரி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஆறுதல் கிடைக்கட்டும்

      Delete
  10. Nanbarukku kavalaigal theerattum... nalamudan vala naanun ungal kaviyil inaikinren..

    ReplyDelete
    Replies
    1. கவலையும் தீர்ந்தது உண்மைதான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more