தெய்வங்கள்

தெய்வங்கள்

நட்பில் நானும் மிதந்தேன்...

நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசிய பின்பு தவித்தேன்

சொற்களைக் கண்டு மலைத்தேன்
சொல்ல முடியாது திகைத்தேன்
இன்னும் சொல்ல நினைத்தேன்
இன்முகம் தேடி அலைந்தேன்

அகத்துள் நினைவில் வைத்தே(ன்)
அன்றே காண விழைந்தேன்
வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
வாய்ப்புத் தேடித் துடித்தேன்

சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்ல முறுவல் முகிழ்த்தேன்
மீண்டும் மனத்தில் நினைத்தேன்

வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
நேரில் காண இருந்தேன்
நேரம் இன்றித் தவித்தேன்

தொலைவில் இருப்பை அறிந்தேன்
தூய நட்பால் நெகிழ்ந்தேன்
தமிழைத் தாயாய் துதித்தேன்
தாகம் தணியப் படித்தேன்

Comments

  1. நட்பில் நானும் மிதந்தேன்
    நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
    பேச வேண்டித் துடித்தேன்
    பேசிய பின்பு தவித்தேன்

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா,நீங்க சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே

      Delete
  2. தங்களின் தினசரி கவிதைகளை படித்தேன் !ரசித்தேன் !மலைத்தேன் !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை தினமும் கண்டு மகிழ்ந்தேன்

      Delete
  3. நட்பைக் கண்டு சிலிர்க்கிறேன்
    அனைவரும் பெறவே விழைகிறேன்;
    நட்பா? கவிதையா? எதைப் பாராட்ட
    இரண்டுமே மனங்களை ஈர்க்க;

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றியால் அகமும் குளிர்ந்தேன் மகிழ்ந்தேன்

      Delete
  4. நட்பின் சிறப்பு அருமை... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே உங்களைபோன்ற நண்பர்களின் வருகையை தினமும் வேண்டி நின்றேன்.கண்டேன்.மகிழ்ந்தேன்

      Delete
  5. நல்ல நட்பை நாள்தோறும் தேடியதை
    சொல்ல வந்தீரோ சிந்தை சில்லெனவே
    வல்ல கவிதனை வகையாய்த் தினம்பாடி
    வெல்லுகிறீரே நட்புகளை அன்பினால்...

    த ம. 5

    ReplyDelete
  6. அன்பானேன் அடியானேன் நண்பனானேன் நன்றியோடு உள்ளம் மகிழ்ந்தேன்

    ReplyDelete
  7. கவித்தேன் குடித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக் கண்டு மகிழ்ந்தேன்

      Delete
  8. தேனில் ஊறிக் களித்தேன்
    தித்திக்கும் அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் .என்னை வாழ்த்தியமைக்கு நன்றிகள்

      Delete
  9. நடபின் பெருந்தக்க யாவுள

    அருமை அய்யா
    ரசித்தேன் சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கய்யா.நீங்க வந்தமைக்கும் ரசித்தமைக்கும்

      Delete
  10. Have you ever considered creating an ebook or guest authoring on other
    blogs? I have a blog based upon on the same subjects you discuss and would really like to have you share
    some stories/information. I know my readers would enjoy your work.
    If you are even remotely interested, feel free to send me an
    e-mail.

    my webpage ... article-spider

    ReplyDelete
    Replies
    1. yes i am interested for further talk you may contact me 9600166699

      Delete
  11. தூய நட்பால் நெகிழ்ந்தேன்

    நட்பின் பெருமையை சிறப்பாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றிங்கம்மா

      Delete
  12. தேன் ஊறும் கவிதையை ரசித்"தேன்" நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நினைத்தேன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று .மகிழ்ந்தேன் உங்கள் வரவைக்கண்டு

      Delete
  13. நட்பால் நாளும் நமக்கு மகிழ்வுதான் கவியாழி ஐயா.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க பெத்தவங்களைப் போல எல்லோருக்கும் அவசியமானது நட்புதான். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  14. இரசித்தேன் மகிழ்ந்தேன் வியந்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அழ.பகீரதன் அவர்களே

      Delete
  15. நட்பில் நானும் மிதந்தேன்
    நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்

    தூய நட்பால் நெகிழ்ந்தேன் //

    நட்பின் பெருமை கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பெருமைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  16. நன்றிங்க சார்

    ReplyDelete
  17. நட்பின் அருமையுணர்ந்த மனமொன்று நட்பைத் தேடியடையும் வழிகளை அழகாய் உணர்த்திய கவிதை அருமை. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நீங்க வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும்

      Delete
  18. அன்பின் ஆழம் புரிகிறது
    அழகாய் வடித்த கவிதைலே
    முன் பின் தெரியா உறவென்றாலும்
    முள்ளாய் தைக்கும் விலகிய நட்பின் தூரம்

    இணைந்தே இருப்போம் இணையத்தில்
    இதயம் மகிழ எந்நாளும் வரும்
    துயரே மறப்பாய் ஐயா நீ
    தூய தமிழின் துணைகொண்டு .......

    ReplyDelete
    Replies
    1. நட்பாய் இருக்க நானும்
      நலமே வாழ்த்த நீங்களும்
      அன்பாய் இருப்போம்
      அன்னைத் தமிழில்
      அழகாய் படைப்போம்
      ஆனந்தம் பெற்று மகிழ்வோம்

      Delete
  19. என்றும் நட்புகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் தொடருங்கள் ...

      Delete
  20. வீரம் கண்டு சிலிர்த்தேன்
    தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
    நேரில் காண இருந்தேன்
    நேரம் இன்றித் தவித்தேன் //தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டில் பணமின்றி கஷ்டப்படும் சகோதரி கடந்த பதினோரு வருடங்களாக கஷ்டப்படுகிறார் அதை எண்ணியே தனியாளாய் தவிக்கும் அதுவும் தனியாக இருக்கும் சகோதரிக்காக இந்த வரிகளைக் குறிப்பிட்டேன்

      Delete
  21. நேரம் இன்றித்தவித்தேன்!///ம்ம் அருமையான வரிகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும்போது தவறாம வாங்க அல்லது இமெயிலில் எல்லாப் பதிவுகளையும் பெறவும்.வருகைக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more