தெய்வங்கள்

தெய்வங்கள்

வேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும்

மீண்டும் எனக்கு நிம்மதி வேண்டும்
மீளாத் துயரும் தாண்டிட வேண்டும்
தாண்டும் உயரம் தெரிந்திட வேண்டும்
தாழ்மை உணர்வு நீங்கிட வேண்டும்

நாளும் நட்பை புரிந்திட வேண்டும்
நல்லவர் கெட்டவர் அறிந்திட வேண்டும்
பாழும் மனமே திருந்திட வேண்டும்
பண்பில் நல்லவர் துணைவர வேண்டும்

தீதும் நன்றே என்றிட வேண்டும்
தீமை இல்லா மனதும் வேண்டும்
தீயவர் ஒதுங்கி போய்விட வேண்டும்
தினமும் என்னை அழைப்பவர் வேண்டும்

பாலை நிலமும் மாறிட வேண்டும்
பருவம் முழுதும் மழைபெற வேண்டும்
பறவை குருவிகள் பயனுற வேண்டும்
பார்க்கும் இடமே செழிப்புற வேண்டும்

உழவன் வாழ்க்கை சிறப்புற வேண்டும்
உழுதே விளைச்சல் பெருகிட வேண்டும்
வேளை தோறும் உறக்கம் வேண்டும்
வேதனை இல்லா கனவும் வேண்டும்

நாளை நடப்பதை அறிய வேண்டும்
நல்லது கெட்டது தெரிய வேண்டும்
வேளை தவறா உணவும் வேண்டும்
விடியல் தோறும் மகிழ்ச்சி வேண்டும்

சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும்
சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும்
நாளை எனதே என்றிட வேண்டும்
நாளும் நல்லதை செய்திட வேண்டும்

Comments

  1. நீங்கள் சொன்னதெல்லாம் அனைவருக்கும் வேண்டும்...

    அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எப்போதும் தளத்துக்கு வரவேண்டும்.நன்றி

      Delete
  2. வேண்டுவது எல்லாருக்கும் கிடைக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கவேண்டும் எல்லோருக்கும்

      Delete
  3. நிம்மதி கிடைக்கும்! நிலைத்திடும் யாண்டும்!
    வெண்மதியாக விளங்கிடும் மீண்டும்
    புலவன் வாக்கு பொய்ப்பது இல்லை
    நலமது ஓங்க நாடாது தொல்லை!

    ReplyDelete
    Replies
    1. தொல்லை நீங்கி நல்லது நடந்தால் சரிங்கையா

      Delete
  4. தீதை மட்டும் நன்று என நினக்க மனம் இடங்கொடுக்கவில்லை !

    வாசிக்க இனிமை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தீமையை தெரிந்தால்தான் நன்மையின் நல்லவழி தெரியும் என்பதால் கூறினேன்

      Delete
    2. நீங்க வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க

      Delete
  5. சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும்
    சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும்
    நாளை எனதே என்றிட வேண்டும்
    நாளும் நல்லதை செய்திட வேண்டும்//

    பாரதி கேட்டது போல் கேட்டு இருக்கிறீர்கள்.(மனதில் உறுதி வேண்டும்)
    வேண்டுவது யாவும் கிடைக்க வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. இத்தனையும் கிடைக்க வேண்டுமானால் மனதில் உறுதியும் வேண்டும்.
      உங்களின் வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  6. சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும்
    சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும்
    நாளை எனதே என்றிட வேண்டும்
    நாளும் நல்லதை செய்திட வேண்டும்

    சிறப்பான சிந்தனை இதற்கு வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,நீங்க வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்

      Delete
  7. நல்ல சித்தனை. சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோ!

    நிம்மதி எம்முடனே நிழலாய் உள்ளதே
    எம்மதி உணர்வததை என்றுமே இல்லையே
    சன்னதி இறைவனடி சிரம்தாழத் தந்திடும்
    நிம்மதி எங்கணும் நிறையும் என்றுமே...

    த ம.7

    ReplyDelete
    Replies
    1. எங்கே நிம்மதி என்று ஏங்கி திரிவதைவிட இங்கேயே உம்போன்ற நல்லோரின் அன்பும் ஆசியும் இருந்தாலே போதுமானது

      Delete
  8. அனைவரின் தேவையும் அழகாய் உரைத்தீர்.. அருமை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நன்றிங்க ப்ரியா

      Delete
  9. அனைவர்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே எல்லாமும் கிடைக்க வேண்டும் .நீங்க வந்தமைக்கு வாழ்த்துக்கள்

      Delete
  10. உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேண்டுதல் நடந்தால் எல்லோருக்குமே நல்லதுதான்

      Delete
  11. அருமையான வேண்டுதல்கள் கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நீங்க வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது நன்றி

      Delete
  12. உங்கள் சிறப்பான கவிதைகளில் இதுவும் ஒன்று. மிகவும் ரசித்தேன். கண்ணதாசன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க முரளிதரன்.உங்களின் சிறப்பான தேர்வுக்கு மிக்க நன்றி

      Delete
  13. என்றும் நாளை நமதே கவலை வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மனோ.நம்புவோம் நாளை நமதே என்று.தைகளின் வருகிக்கு நன்றி

      Delete
  14. எனக்கும் இவையெல்லாம் அவசியம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் போலவே உங்களுக்கும் கிடைக்கும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more