தெய்வங்கள்

தெய்வங்கள்

வேண்டும்நீ எனக்கு வேண்டும்....

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும்
ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா
அவரின் இணைக்கு நிகருண்டா

பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும்
உற்றவர் அன்புக்கு விலையுண்டா
கற்றவருமே கண் கலங்குவார்
கல்லாதவரோ மனம் புழுங்குவார்

சொத்தும் சொந்தமு மெனனக்கு
சொல்லென்னா துயரம் தருமே
சுகமும் பணமும் வேண்டாமே
சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே

வாழ்ந்த நாட்களை எண்ணியே
வாழ்வு முழுதும் நானிருப்பேன்
வாடிபோடி என்றழைத்தே நீயும்
வசைபாட வேண்டும் அன்பாக

மீண்டும் எழுந்து வருவாய்
மேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்

வேண்டும்நீ எனக்கு வேண்டும்
மீண்டும் துணைக்குநீ வேண்டும்
தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும்
தைரியம் சொல்லநீ வேண்டும்


Comments

  1. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  2. கற்றவருமே கண் கலங்குவார்
    கல்லாதவரோ மனம் புழுங்குவார்

    துன்பம் ...

    ReplyDelete
    Replies
    1. ஆம் பெண்ணின் துயரம் சொல்ல வார்த்தை இல்லாதது

      Delete
  3. Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  4. ''..மீண்டும் எழுந்து வருவாய்
    மேனியில் எழுந்திடு உணர்வாய்
    தாங்கியே அருகில் உன்னைத்
    தாய்போல் காப்பேன் அன்பாய்...''
    ஏக்கம் புரிகிறது..
    அமைதி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. படுக்கையில் இருக்கும் புருஷனை அழைக்கும் பெண்ணின் உணர்ச்சியின் பெருக்கு.

      Delete
  5. இடையில் வரும் சொந்தம் ஆனால் இணையில்லா சொந்தம் . இணைந்தே வாழவும் இணைந்தே மாளவும் எண்ணத் தோன்றும் சொந்தம் . இப்போ தைரியம் வேண்டும் . அருமை .

    ReplyDelete
    Replies
    1. இறுதிவரை அன்புக்கு ஏங்கும் சொந்தம் கணவனின் மனைவியின் சொந்தமே .எதையும் தாங்கும் எப்போதுமே ஏங்கும்

      Delete
  6. உணர்வதில் கலந்து உயிரெனவாக உள்ளத்திலுறைந்ததே
    உண்மையதை இங்கு உவகைதரவே உரைத்திட்டீரே
    மணம் தந்தவாழ்வு மனதில்நிறைய மகிழ்வுதோன்றிடுமே
    கணமேனும் பிரிவில்லை கனவிலும் நனவிலுமே!...

    உணர்வுபூர்வமான கவிதை! வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம. 5

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அருகில் இருக்க வேண்டும் .இல்லாதிருந்தாலும் சொல்லாலே அழைக்க வேண்டும் .எல்லோரின் வாழ்வுபோல சிறக்க வேண்டும்

      Delete
  7. உணர்வுகளை கிளர்ந்தெழவைக்கும் கவிதை அய்யா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ,எவ்வளவு பணம் இருந்தாலும் விரும்பியவரின் துணை பெரிதல்லவா?

      Delete
  8. உணர்வுபுர்வமான கவிதை...
    வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தில் ஏக்கமும் உதட்டில் உணர்ச்சியும் கொண்டு வாழ்க்கைக்காக ஏங்குபவரின் உணர்ச்சியின் வெளிப்பாடே

      Delete
  9. கணவன் அருகில் இருப்பதைத்தான் பெண் விரும்புவாள் அதை அழாகாக சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம். என் நெஞ்சில் சுமந்த குழந்தை//வருத்தமான உடன்பிறவா சகோதரிக்கு இப்படியொரு நிலைமை

      Delete
  10. இறந்தாலும் நீ வேண்டும்
    இவ்வுலகம் இடிந்தாலும் நீ வேண்டும் எனக்கு.. அழகிய கவிதை..
    (viralkal.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க

      Delete
  11. மீண்டும் எழுந்து வருவாய்
    மேனியில் எழுந்திடு உணர்வாய்
    தாங்கியே அருகில் உன்னைத்
    தாய்போல் காப்பேன் அன்பாய்//

    அருமையான கவிதை.
    உணர்வுபூர்வமான கவிதை.

    ReplyDelete
  12. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

    ReplyDelete
  13. மிகவும் அருமை...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more