தெய்வங்கள்

தெய்வங்கள்

உடல் முழுதும் வியர்த்தாலும்.....

 

 (நன்றி கூகிள்)

பாய்ந்து வரும் காளையது
பார்தவுடன் வியந்து விடும்
பருவமான  உடல தனால்
புகுந்து விளையாடி வரும்

கருப்பு வெள்ளை நிறமாக
காளையது துணிந்து நிற்கும்
கன்னியரைக் கண்டுவிட்டால்
கழுத்தை தூக்கி முட்டவரும்

ஊர் முழுக்க நின்றாலும்
உரியதையேத் தேடிவிடும்
உள்ளமதைக் கொள்ளை யாக்கி
உறவுக்காக் ஏங்கி நிற்கும்

பரிதவிக்கும் நிலத்திலே
 பக்குவமாய் விதை விதைக்கும்
 பாத்தியிலே விதைத்து விட்டு
பாதயதைத் தேடித் போகும்

உருவமதைக் கண்டவுடன்
உடல் முழுதும் வியர்த்தாலும்
விதியதனை எழுதி விட்டு
விரைவாகப் பதுங்கி விடும்



Comments

  1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே

      Delete
  2. காளை கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க எஸ்.சுரேஷ்

      Delete
  3. காளையை பற்றிய கவிதை சிறப்பு. ஆனா, சில நேரத்துல அது படும் இம்சையை பார்க்கும்போது ஐயோ பாவமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா அய்யோ பாவம்தான் என்ன செய்வது

      Delete
  4. காளைகளை பசுக்கள் போல கவனிப்பதில்லைதான் நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .உங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  5. இதுவரையில காளையை பற்றியநான் வாசிக்கும் முதல் கவிதை இதுதான்

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா நல்ல இருக்கிறதா.

      Delete
  6. இன்றுகாலை கிராமத்திற்குச் சென்றீர்!!!! அதன் பலனா! காளையைக் கடத்தி வந்தீர்!

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக் கோழியைத்தான் கொண்டுவந்தேன் அய்யா.ஆனால் காளையைக் கண்டு வந்தேன்

      Delete
  7. காளை கவிதை அருமை.

    ReplyDelete
  8. அருமை. ராஜி சொல்லும் உணர்வு எனக்கும் உண்டு.

    ReplyDelete
  9. Replies
    1. சிந்தனைச்செய்தால்நன்று

      Delete
  10. கிராமத்துக் கவிதை. மிகவும் அருமை.

    ReplyDelete
  11. பாவம் காளை.இப்போ உங்க கையிலயும் சிக்கிடிச்சா !

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more