தெய்வங்கள்

தெய்வங்கள்

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை 
அதனால் அற்புதமாய் இருக்கிறதே
சொற்பதமாய் சொல்ல இயலவில்லை
சுகமாகத்தான் இன்று விடிகிறது

வழியெங்கும் மழைத் துளிகள்
வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள்
துளித்துவரும் அந்த ஆசைகள்
துவக்கம்தான் எத்தனைச் சுகம்

அடிக்கடி என்னை வருத்தாதே
அடியேன் மனதைக் கெடுக்காதே
இடிக்குது நிலைமைக் கொல்லாதே
இளமையின் துடிப்பைக் கொடுக்காதே

எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு
இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது 
தப்பேதும் இல்லைதான் ஆனால்
தயக்கம் மல்லவா வருகிறது

முப்போதும் மகிழ்ந்த நாட்கள்
முடிவின்றி தவிக்கிறதே முறையா
முன்பொழுதில் வருவது சரியா
முறையான இனிமை உணர்வா

மழையே மீண்டும் வா!வா!!
மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
இனிமை யுணர்வேப் போ!போ !!
இரவில் மட்டும் ஹி!ஹி!!...


Comments

  1. ஹிஹி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே ஹிஹி...

      Delete
  2. வித்தியாசமான ஆயினும் மகிழ்வூட்டும் அருமையான படைப்பு எப்போதேனும் எவரக்கும் நேரும் இதுபோன்ற ஜாலி உணர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உண்மையான மகிழ்ச்சியின் உணர்வே இந்தக் கவிதை

      Delete
  3. .. மழையே மீண்டும் வா!வா!!
    மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
    இனிமை யுணர்வேப் போ!போ !!
    இரவில் மட்டும் ஹி!ஹி!!... ..

    அழகான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க

      Delete
  4. கதிரவன் வந்து விட்டான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் காலையிலேயே வந்துவிட்டான் ஆனால் கஷ்டமும் தந்துவிட்டான்

      Delete
  5. மழை வரட்டும்! மண் செழிக்கட்டும்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  6. ரசனக்காரர் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்க ரசனைக்கு.மீண்டும் மீண்டும் வாருங்கள்

      Delete
  7. மழையே மீண்டும் வா!வா!!
    மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!

    மழைத்துளியாய் கவிதை..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.மழைக்கு இதுதான் தோன்றியது.

      Delete
  8. சூரியனைக் காணாமல் மகிழ்ந்து பாடும் கவிக்கூத்து ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சிலநேரங்களில் இப்படியும் ஏக்கமுண்டு

      Delete
  9. மழை பொழியட்டும்... மண் குளிரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. மனமும் இனிக்கட்டும் எனபதும் உண்மைதானே

      Delete
  10. வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க.தொடர்ந்து வாங்க

      Delete
  11. மழை பொழியட்டும்.
    மகிழ்ச்சி பரவட்டும்
    நன்றி

    ReplyDelete
  12. இயல்பான கவிதை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க கருண்

      Delete
  13. 'இளமை முழுதும் நனையும் வரையில் வா' என்று வைரமுத்து அழைத்தார் மழையை! மழை என்றுமே இனிமைதான், குறிப்பாக தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்கு! மீண்டும் உபரி நீர் ஓடிக் கடலில் கலக்கும். தடுத்து சேமிக்க முடியாத நிலையில் நாம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்,உபரி நீரைப் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளோம்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more