பெத்தவங்களை போற்றுங்க
கற்றதனால் மறக்குமோ பெற்றோரின் கடமைகள் காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு கடையிலும் கிடைக்குமோ கனிவுடனே பேர்சொல்ல கண்குளிரப் பார்த்திருக்க மீண்டும் வந்து பிறப்பாரா மகிழ்ச்சியோடு அழைப்பாரா மற்றவரும் நினைப்பாரோ மகிழ்ச்சியாக சிரிப்பாரோ உற்றாரும் வாருவாரோ உடனிருந்து பார்ப்பாரா கருவுற்ற நாள்முதல் கண்ணுறக்கம் பாராமல் உருவாக்கி வளர்த்தாரே உதிரத்தை உணவாக்கி பெத்தவங்களை போற்றினாலே பேரிண்ப தடையேது மகிழ்ச்சி பெற்றதனால் பிள்ளைகளின் பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு