நினைத்தேன் சொன்னேன்....
ஒதுங்கி வாழ்வது தவறு ஒற்றுமை காப்பதே சிறப்பு ஒன்றி ணைந்து சேர்ந்தால் ஒளிமயமாகு முன் வாழ்வு ***** சினம் கொள்ள மறந்தால் சிரிப்பை துணைக்கு அழைத்தால் செழிப்பை முகத்தில் காணலாம் சிறப்பாய் உடலைப் பேணலாம் ***** வாழ்க்கை என்றப் பாதை வட்டமானது வண்ணம் மிகுந்தது எளிமையும் மனதில் ஏழ்மையானது எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு ***** உள்ளம் சொல்வதைக் கேட்டு உரியவர் மனதை அறிந்து செய்யும் செயலை துணிந்து செய்திடும் காரியம் ஜெயமே ******