Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நினைத்தேன் சொன்னேன்....

ஒதுங்கி வாழ்வது தவறு ஒற்றுமை காப்பதே சிறப்பு ஒன்றி ணைந்து  சேர்ந்தால் ஒளிமயமாகு முன் வாழ்வு                    ***** சினம் கொள்ள மறந்தால் சிரிப்பை துணைக்கு அழைத்தால் செழிப்பை முகத்தில் காணலாம் சிறப்பாய் உடலைப் பேணலாம்                      ***** வாழ்க்கை என்றப் பாதை வட்டமானது வண்ணம் மிகுந்தது எளிமையும் மனதில் ஏழ்மையானது எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு                      ***** உள்ளம் சொல்வதைக் கேட்டு உரியவர் மனதை அறிந்து செய்யும் செயலை துணிந்து செய்திடும் காரியம் ஜெயமே                       ******

17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......

Image
17.07.2013 அன்று   நான் கோவை ரயிலில் சொந்த வேலையாக கோவைக்கு சென்றிருந்தேன்.என்னை கோவை பதிவர்களின் சார்பாக நண்பர் கோவை ஆவி (ஆனந்த்) அவர்கள் வரவேற்றார். அங்கிருந்து கோவைஆவியும்  நானும்  கோவையின் பிரபலப் பதிவர்களான.திரு.கோவை ஜீவா,உலகதமிழ் சினிமா ரசிகன் ஆகியோரய் சந்தித்தோம்.அங்கு  சென்னையை சேர்ந்த பதிவர்களின் நலன் விசாரித்தார்கள் பிறகு அடுத்த பதிவர் சந்திப்பு நிகழ்வு பற்றி ஆர்வமாய்  கேட்டார்கள் .அடிக்கடி நாங்கள் சந்திப்பதுப் பற்றி சொன்னதும் மகிழ்ந்தார்கள். ஆனால் நான் ரயிலிலேயே மதிய உணவு சாப்பிட்டேன் என்று சொல்லியும் நிச்சயம் எங்களோடும் உணவருந்த வேண்டுமென கட்டாயப்படுத்தி னார்கள் .அதனால் மேலும் நான் சாப்பிட வேண்டிய  சூழ்நிலையில் பரோட்டாவும்  மிளகு கோழி வறுவல் நால்வரும் பேசிக் கொண்டே உணவருந்தினோம். கோவை ஜீவா அவர்கள் எனக்கு பரிமாரியதுடன் கவனமாக அதைப் படங்களும் எடுத்துக் கொண்டார். பேச்சினூடேஉங்க வயது என்ன? என்று நண்பர் ஜீவா அவர்கள் கேள்வி கேட்டு  பின்அவரைவிட மூத்தவன் (நானும் இளைஞன்)என்று புரிந்து கொண்டு  அடுத்த கேள்வியாக எல்லோருமே கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்க கோவை ஆவி தானாக முன்வந்த

தாய்நாடு அழைக்கின்றது..........

அவசர உலகமோ அதற்குள்ளே அனைத்து உறவையும் கெடுக்கிறதே மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை மீண்டும் நம்மூர் அழைக்கிறதே எல்லா உறவும் மறக்கிறதே ஏற்றத் தாழ்வும் வருகிறதே என்பதை எண்ணியே மனமே எரிமலையாய் இன்று வெடிக்கிறதே நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே நல்லதும் கெட்டதும் காண்பதற்கு இல்லமும் தேடி அலைகிறதே இன்பமாய் இதுவே இருக்கிறதே காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே கனவுகள் எல்லாம் நிஜமானதே ஊர்விட்டு மறந்து போன  உறவினை மீண்டும் நினைக்கிறதே இத்தனை நாள் மறந்திருந்த இன்பம் மீண்டும் வருகிறதே இங்கேயே நான் தங்கிடவே இன்று மனம் துடிக்கிறதே அப்பாவின் அன்பு மகிழ்கிறதே அம்மாவின் உணவும் ருசிக்கிறதே இப்போதும் உறவுகளை எண்ணி இனித் திரும்ப தருகின்றதே

தினம் தாலாட்டுக் கேட்கும்.....

கொன்றை மலர்க் குலுங்கும் குளமெல்லாம் அல்லி மலரும் கொஞ்ச வேண்டி சூழ்நிலைகள் கொண்டாட்டம் ஏங்கி  நிற்கும் வானமும் மகிழ்ச்சிக் காட்டும் வயலில் நண்டுகள்  ஓடும் மணம் முடிக்கும் மங்கைக்கு மலரும் மகரந்தமும் பிடிக்கும் தலைநிறைய பூச்சூடி துணையோடு தினம் தாலாட்டுக் கேட்கும் தனிமையும் வெறுக்கும்  ஏக்கம் தனியறையில் தானாகப் பேசும் ஆனால்..... ஆடியில் சேர்ந்தாலே ஆபத்தென அன்றே தவறாய் சொல்லி அன்பான தம்பதியைப் பிரித்து ஆருடமாய் சொல்லி வைத்தார்கள் மருத்துவ வசதி இன்றி மறுப்பவர் எவரும் இன்றி வீணான கற்பனையில் அன்று வேதனையாய் பிரித்து விட்டார்கள் மேமாதம் சூரியன் மேகமின்றி மேனியில்  வெயில் படும்போது சான் உடம்பு குழந்தைக்கும் சங்கடங்கள் வந்து சேருமென்றே தோதான சோதிடமும் சொல்லி தொலைவிலே  தள்ளி  வைத்தார்கள் விஞ்ஞான வளர்ச்சியிலே தேவையில்லை விரைவான மருத்துவம் உண்டு சிந்தித்து செயல்படுங்கள்  இன்று சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள் இன்பத்தில் மகிழ்வோரை இணைத்து இளமையை உணர வாழ்த்துங்கள்

காதலுக்காய் கடிதம் எழுதி....

வீட்டுப் பாடம் படித்தெழுத விடியற்காலை எனக்குப் பிடிக்கும் விடிஞ்சதுமே நீண்ட நேரம் வீசும் காற்றும் பிடிக்கும் தாண்டிஓடி ஆடப் பிடிக்கும் தைரியமாய் மரத்திலேற பிடிக்கும் சைக்கி லோட்டப் பிடிக்கும் சடுகுடு ஆடவும் பிடிக்கும் மரத்தின் உச்சிஏறி நின்று அங்கிருந்து குதிக்கப் பிடிக்கும் ஒற்றுமையாய் நண்பர்களுடன் ஊர்முழுக்கச் சுற்றப்பிடிக்கும் சீக்கிரமேப் பள்ளிச் சென்று சேர்ந்துப் பழகப் பிடிக்கும் சிணுங்கி அடிக்கும் அவளழகை சற்றுத்தள்ளி ரசிக்கப் பிடிக்கும் கற்பதனைக் காத்து நிற்கும் கன்னியரும் எனக்குப் பிடிக்கும் காதலுக்காய் கடிதம் எழுதி கண்டவுடன் கிழிக்கப் பிடிக்கும் இப்படித்தான் இமைமையை கழிந்ததாய் இன்றுதான் எனக்குப் புரிந்தது தப்பதெவும் செய்யாமல் இருந்ததால் நட்பதுவே நல்லவனாய் மாற்றியது

அவரவர் வாழ்கையை வாழுங்கள்.....

அம்மா வாழ்ந்த காலத்திலும் அடிமையாக இருந்ததில்லை அப்பா தாத்தா பாட்டியிடம் அன்பாய் இருக்கத் தவறவில்லை எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து எந்த முடிவும் செய்திடுவார் இல்லா நிலையிலும்  உள்ளதையே இனிமையாகச் சொல்லிடுவார் வசதியான வாழ்க்கைக்கு  என்றும் வெளியில் வேலைக்கு சென்றதில்லை வருவோர் போவோர் நண்பரிடமும் வீட்டுச் சண்டையைச் சொன்னதுல்லை இப்போ நிலைமை மாறியது இனிமை வாழ்வும் மறைந்தது... தப்பாய் எண்ணும் பழக்கத்தால் தனியாய் செல்லும் நிலையானது பிரிந்தே வாழ்ந்து வந்தாலும் பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும் இருந்தும் சண்டை வருகிறதே இல்லற வாழ்வும் கசக்கிறதே அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு அன்பாய் பரிவாய் பேசுங்கள் அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் அவரவர் வாழ்கையை வாழுங்கள்

பணம்....பணம்...பணம்..

மக்கள் பலபேர் மடிவதற்கும் மனதை வருத்திக் கொல்வதற்கும் நிச்சயக் காரணம் பணமாமே நித்தமும் கெடுப்பது இதுதானே மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு மனமே வருத்தி மாய்வதற்கு மனிதம் தெரியாப் பணமாமே மனிதனின் குணமும் கெடுதாமே நாளும் நாளிதழ் பார்க்கின்றோம் நல்லச் செய்திகள் இருந்தாலும் வாழும் முறையில் மாற்றத்தால் வருத்தித் தினமும் அழுகின்றோம் தினமும் நாமே காண்கிறோம் தெரிந்தும் மௌனம் காக்கிறோம் குணமே இல்லாப் பணத்தாலே குடும்பமே தற்கொலை செய்கிறதே அவசர உலகில் அனைவருமே அடிமை வாழ்வு வாழ்வதற்கும் அக்கம் பக்கம் நடப்பதற்கும் அடைக்கலம் கொடுப்பது பணமாமே

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல.........

வாகனம் ஓட்டிச் செல்லும்போது வருகிறக் கோபத்தில் மறுந்துடாதீர் வண்டியை வேகமாய் ஒட்டாதீர் வழியில்  தவறாய் செலுத்திடாதீர் தலையில் கவசம் அணிவதனால் அழகும் கெட்டுப் போகாதே தடுமாறிக் கீழே விழுந்தாலும் தலையும் எங்கும் மோதாதே கண்டவர் அருகே வந்தாலும் கண்களை வேறங்கும் திருப்பாதீர் கைபேசி அழைப்பையும் தவிர்த்திடுவீர் கவனமாய் வாகனம் செலுத்திடுவீர் நீண்ட தூரம் செல்லுகையில் நிதானம் எப்போதும் இழக்காதீர் இருக்கைப் பட்டையை அணிந்தே இயல்பாய் வாகனம் செலுத்திடுவீர் வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல வாழ்க்கை உண்டு மறந்துடாதீர் தாகம் தண்ணீர் இடையிடையே தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி

Image

இந்நாள் தவிப்பு....

இதயமெல்லா மின்றுத் தவிக்கிறதே ஈன்றவர் நினைவு வருகிறதே தாண்டிய தூரமும் தெரிகிறதே தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே என்னைத் தவிக்க விட்டு எங்கே சென்றீர்கள் கடவுளே விண்ணைத் தாண்டி வரவா வேதனையைச் சொல்லி அழவா வேண்டுவேன் உங்களை  மீண்டுமே வேதனைத் தாங்கியேக் காத்திட மீண்டுமென் உங்களின் அன்பையே மீட்டிடப்  பிறந்திட விரும்புதே ஈன்ற இந்நாள் தெரியுமா என்னை அறிந்திட முடியுமா வேண்டுவேன் உங்களது ஆசியை வேதனைத் தீர்த்திட வாருங்கள் விதியை மாற்றியே வாருங்கள் வெளிச்சமும் எனக்குத் தாருங்கள் தாண்டிய நாட்களை நானுமே திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன் அடுத்தப் பிறவி யாதென அறிந்து நீவீர் சொல்வீரோ தடுத்தே என்னை உம்முடன் துணைக்கு அழைத்துச் செல்வீரோ

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால்  தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்

காதல்...நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்....

எல்லா வயது மனிதருக்கும் என்றும் தொடர்வது காதலாம் இல்லா நிலையில் உள்ளோர்க்கும் இனிமைத் தருவது காதலாம் ஏக்கம் கொண்டே எப்பொழுதும் ஏங்கித் தவிக்கும் காதலாம் தூக்கம் கெட்டும் தினந்தோறும் துணையாய் நிற்கும் காதலாம் சொல்லா மொழியில் உணர்ச்சிகளை சொல்லித் தருவதும் காதலாம் சொல்லே இன்றிப் பார்வையாலே சொல்லும் மொழியும் காதலாம் பார்த்த உடனும் வந்திடுமாம் பழகிப் பேசியும் மகிழ்ந்திடுமாம் பாசம் கொண்டே வளர்ந்திடுமாம் பகைமை இல்லாக் காதலாம் உண்மையை விரும்பும் காலமும் உணர்ச்சியை தூண்டும் காதலாம் உறவைவும் நட்பும்  வளர்வதற்கு உரிமைமைச் சொல்லும் காதலாம் காதல் நன்றே எப்பொழுதும் காசு பணத்தைப் பார்ப்பதில்லை காமம் இல்லா நட்புடனே கடைசி வரையும் தொடர்ந்திடுமாம் நேசம் அன்பு நட்புடனே நிறமோ மொழியோ பாராமல் நேர்மையான காதலே இறுதியில் நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை  அதனால் அற்புதமாய் இருக்கிறதே சொற்பதமாய் சொல்ல இயலவில்லை சுகமாகத்தான் இன்று விடிகிறது வழியெங்கும் மழைத் துளிகள் வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள் துளித்துவரும் அந்த ஆசைகள் துவக்கம்தான் எத்தனைச் சுகம் அடிக்கடி என்னை வருத்தாதே அடியேன் மனதைக் கெடுக்காதே இடிக்குது நிலைமைக் கொல்லாதே இளமையின் துடிப்பைக் கொடுக்காதே எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது  தப்பேதும் இல்லைதான் ஆனால் தயக்கம் மல்லவா வருகிறது முப்போதும் மகிழ்ந்த நாட்கள் முடிவின்றி தவிக்கிறதே முறையா முன்பொழுதில் வருவது சரியா முறையான இனிமை உணர்வா மழையே மீண்டும் வா!வா!! மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!! இனிமை யுணர்வேப் போ!போ !! இரவில் மட்டும் ஹி!ஹி!!...

அம்மா உணவகம்-தியாகராய நகர்

Image
                அம்மா உணவகம்-தியாகராய நகர் முகப்புத் தோற்றம்                                                          விலைப்பட்டியல்  சுகாதாரமான முறையில் தயாரிக்கப் பட்ட பொங்கல் மற்றும் இட்லி சாம்பார்                                                                     அனைவரும்  உணவருந்தும் இடம்                                        மகிழ்ச்சியாய் சாப்பிடுபவர்கள்                                            உணவு தயாரிக்குமிடம்                                        சுகாதாரமான சுத்தமான குடிநீர் நான் கடந்த ஞாயிறு அன்று நடைபயிற்சிக்காக வழக்கமாக செல்லும் சென்னை  தியாகராய நகரிலுள்ள பனகல் பூங்கா சென்றிருந்தேன்.அங்கு எனது அன்பிற்குரிய நண்பர்.திரு.பெரியசாமி.(முன்னாள் வங்கி அதிகாரி) என்னிடம் அம்மா உணவகம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிகொண்டிருந்தார்.அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் மனதில் அவ்வளவு சுகாதாரமும் தரமும் இருக்காது  என நினைத்திருந்தேன். அவர் எண்ணைக் கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்.நானும

வறுமைப் போக்கிட உதவுங்கள்....

காலைச் செய்திகள் படிப்பதில்லை கடமை சீக்கிரம் முடிப்பதில்லை வேளைதோறும் உணவையும் மறந்து விழுந்தேன் வலையில்  தினந்தோறும் முக்கிய நிகழ்வுகள் மறந்தாலும் முகப் புத்தகம் பார்ப்பதாலே முகமே பார்க்கா நண்பருக்கு முதலில் வணக்கம்  சொல்லுகிறேன் இடமோ ஊரோ தெரியாமல் இளமை முதுமை அறியாமல் இணைந்தே இன்றும்  நண்பர்களாய் இனிதாய் பழகி வருகிறேனே தலைமைப் பண்பும் வளர்த்திடவே தகவல் இணைந்தே பகிர்ந்திடவே தினமும் நடக்கும் நிகழ்வுகளே துணையாய் நமக்கு கிடைக்கிறதே வலையைத் தினமும் பாருங்கள் வாழ்க்கை முறையை நாடுங்கள் வறியவர் மாணவர் இல்லார்க்கும் வறுமைப் போக்கிட உதவுங்கள்

மனிதம் போற்றி வாழ்ந்திடவே

மதமும் மொழியும் மக்களையே மனிதம் போற்றி வாழ்ந்திடவே தினமும் அதையேச் சொன்னாலும் தீமைச் செயலைச் செய்வதுமேன் பகைமை மனதில் வேண்டாமே பார்க்கும் இடங்கள் எங்கெங்கும் தகைமை இல்லா நிகழ்ச்சியால்-பகையே தொடர்ந்து வளர்ந்து  வருகிறதே உறவைக் கெடுத்து வருகிறதே உள்ளம் சிதறி விடுகிறதே பொறுமை இல்லா மனத்தையே-அது பெரிதும் தாக்கி அழிக்கிறதே இளையோர் முதியோர் எல்லோர்க்கும் இப்படி நிலைமை ஆவது ஏன் இயந்திர உலகில் இப்போதும்-தீர்க்க இதனைப் போக்க மருந்தில்லையோ தந்திரம் செய்து தவறிழைக்கும் தரித்திரக் காரன் திருந்தினாலே வந்திடும் வினைகள் தீருமே-மக்கள் வாழ்கைவும் சிறப்பாய்  இருக்குமே சிந்தனை இதனை செய்யுங்கள் சிறந்ததை முறையே சொல்லுங்கள் சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே சிறக்க  முனைந்தே வாழ்ந்திடுங்கள் துயரம் கொள்ள வேண்டாமே துணையாய் உறவை கண்டாலே மனிதநேயம் போற்றினால்-பகைமை மறந்துப் பாசம் வளர்க்கும்

பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்

Image
                                               பச்சைக் கீரையைப் பார்த்தவுடன் நிச்சயம் உண்ண மனம் வருதே அதிக விலையில் விற்பதில்லை அதையும் சிலரோ விரும்பவில்லை பார்த்தால் நம்மைக் கூப்பிடுமாம் பக்கத்தில் போனால் நாறிடுமாம் பயந்தே வாங்கி சமைத்தாலே பலனோ வருவது நோய்நொடியாம் மழையில் பணியில் அதிகமாக மலிந்த விலையில் கிடத்திடுமாம் மனதோ உண்ணத் துடித்திடுமாம் மறுபடி மீண்டும் தடுத்திடுமாம் குப்பை மேடு கழனிகளில் குளிர்ச்சியாக மிகுந்தே வளர்ந்திடுமாம் கோழி ஆடு மாடுகளும் விரும்பி  குனிந்தே அதையும் திண்ணுடுமாம் இப்போ நிலைமை அதுவில்லை இயற்கை உரமோ போடவில்லை செயற்கை மருந்தை தெளிப்பதனால் சீக்கிரம் வளர்ந்தே விடுகிறதாம் இயற்கையை மாற்றி வருவதனால் இழப்போ மனித உயிர்தானே இனிமேல் கீரையை விளைவிக்க இயற்கை உரங்களை போடுங்களேன்

மலையில் சிவனைக் கண்டிடவே....

Image
                          (நன்றி-கூகிள்) மலையில் சிவனைக் கண்டிடவே மனதில் அமைதிக் கிடைத்திடவே துணையும் உறவும் மகிழ்ந்திடதே தூரப் பயணம் செய்தனரே காட்டில் மரங்களை வெட்டியதால் கட்டடம் பலதும் கட்டியதால் ஏட்டில் சொல்ல இயலாத எண்ணில் அடங்கா உயிரிழப்பை இத்தனை உயிர்கள் மடிந்ததை இப்படி நடந்தது எச்செயலால் கற்பனை கெட்டா உயிரிழப்பு கண்டதும் மனது கொதிக்கிறதே ஊருக்கும் உறவுக்கும் தெரியாது உயிரைத் துறந்த நல்லோர்கள் உடலைக் கூட காணாத உண்மை நிலையை அறிவீரா மக்கள் மனதைக் காயமாக்கும் மடமையான இச்செயலால் மனதும் இப்போ வலிக்கின்றதே மழையோ அதையே சொல்கிறதே இயற்கை வளங்களை காத்திடுவோம் இனியே அதனை போற்றிடுவோம் செயற்க்கையாலே வரும் துயரை சீக்கிரம் தடுத்து முறியடிப்போம் மரங்கள் அருகில் வளர்த்திடுவோம் மலைவளம் நன்றே காத்திடுவோம் இயற்கை செய்யும் பேரிழப்பை இனிமேலாவது தடுத்திடுவோம்

உலகமே உறவாகிவிட்டது

உலகமே உறவாகி விட்டது உரிமையுள்ள துணையாகி விட்டது வலைப்பக்கம் தினம் வராவிட்டால் வருத்தமாகி மனம் தவிக்கின்றது இளமைக்கும் முதுமைக்கும் இதுவே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது எண்ணங்களைப்  பகிர முடிகிறது எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சரிசமாய் பேசத் துடிக்கின்றது புதுஉலகம் புதுஉறவை பார்க்க புத்தகமாய் நினைவைக் கோர்க்க எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை இப்போதும் இனிமையாக எழுத முடிகின்றது

எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...

சின்ன வயதில் எனக்கு சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும் எண்ணமதைக் கவிதையாக எழுதிப் பார்க்கப் பிடிக்கும் வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும் வண்ண வண்ண உடைபிடிக்கும் கொஞ்சிப் பேசும் எண்ணமுடன் கூடிப்பேசும் இடம் பிடிக்கும் தஞ்சம் தேடும் விழியாளின் தாக்கும் பார்வைப் பிடிக்கும் தள்ளி நின்று அவளருகே தஞ்சம் கேட்கப் பிடிக்கும் நித்திரையில் அவள் வந்து நினைவதில ணைக்கப் பிடிக்கும் நீண்ட நேரம் கனவுலகில் நேர்மையாக பழகப் பிடிக்கும் நல்ல நல்ல கவிதைகளை நண்பியிடம் சொல்லப் பிடிக்கும் நீண்டநேரம் பேசுகின்றப் பெண் நட்பினையும் எனக்குப் பிடிக்கும் அஞ்சி நின்று குறுகுறுன்னு அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும் ஐந்திரண்டு நிமிடம் அவளழகை ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும் எத்தனையோ சொல்ல வேண்டும் என்நினைவை அழைக்க வேண்டும் பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக போற்றவேண்டும் பாடவேண்டும்

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே இல்லா நிலையில் உள்ளோர்க்கு இதயம் கனிந்தே உதவிடுங்கள் கல்விப் பணியைச் செய்திடுங்கள் கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள் நல்லச் செயலைச் செய்வதற்கு நான்குபேரைத் தத்தெடுங்கள் காசுப் பணமாய் கொடுக்காமல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே பேசும் உலகம் உங்களையே போற்றி மகிழும் நற்செயலை இன்றைய நாளில் தவிப்போரை இயலா நிலையில் உள்ளோராம் அருகில் சென்று கேட்டறிந்து அவரை உயரச் செய்வீரே கல்விப் பணியை முடிந்தவரை கடமையாகச் செய்து வந்தால் எல்லா தெய்வமும் துணைவந்தே ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....

ஏழரைச் சனியின் தாக்கத்தால் ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே காலையில் எழுந்ததும் கடவுளுக்கும் கற்பூரம் காட்டி வணங்குவோரே இறைவன் செயலைக் குறைப்பதற்கே எல்லா கோவிலும் செல்வோரே ஏழை எளியவர் தவிப்பதற்கு இறைவன் காட்டும் வழியென்ன வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ மேலும் கீழும் வருமன்றோ வாழும் முறையுயே என்றிருந்து வந்தத் துயரையும் வென்றிடலாம் உள்ளக் குறையை சரிசெய்தால் உயரும் வழியைக் கண்டிடலாம் நல்லச் செயலை நாள்தோறும் நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம் தெய்வம் தங்கும் கோவிலாக தினமும் மனதை வைத்திருந்து தெரிந்தோர் உயர வழிசெய்தால் தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை அதற்குமே யாருக்கும் கவலையில்லை காலங் கடந்து  திண்பதும் கறியும் கொழுப்பும் உண்பதும் கடையில் கூடி பேசிக்கொண்டே கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம் விற்பனையில் முன்னாக வருவதற்கு வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு எத்தனையோ மருந்துகள்  உள்ளது எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு கற்பனைச்  செய்தாலும் குறையாது கண்டபடியும் சுருக்கவும் முடியாது கைவீசி நடப்போரை கடந்து கனதூரம் செல்லவே  இயலாது பட்டினிப் பசியாய் கிடந்து பழக்குவோம் உடலைக் குறைத்து பாட்டன் பாட்டி உடலைபோல பாதுகாப்போம் உடல் இளைத்து தினமும் காலையில் நடந்தே தண்ணீர் நிறையக் குடித்தே திண்பதில் கொஞ்சம் குறைத்தே திடமாய் வாழலாம் செழித்தே

புனிதக் கல்விப் பணிசெய்விரே....

மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி மக்களின் செயலை முறைப்படுத்தி மானுடம் போற்றி வளப்படுத்தி மனதைக் காப்போம் திடப்படுத்தி நல்லோர்  பலரின் சொல்லையுமே நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே கல்வியில் சிறந்த மாண்பையுமே கற்றதில் நல்லதை போற்றுவோமே இல்லா நிலையில் உள்ளவர்க்கும் இனிதே கல்வியை தொடர்பவருக்கும் பொல்லா பணத்தை கொடுக்காமல் ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள் உயரும் வழியைக் காட்டுங்கள் உழைத்தே சிறக்கும் நல்வழியை உயர்வாய் சொல்லித் தாருங்கள் இளையோர் இன்றும் நேர்மையதை இனிதாய் போற்றி வாழ்கின்றனர் துணையாய் படித்த கல்வியது தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ

திரண்டக் கனியைக் கசக்கினாலே...

இயற்கை அன்னைப் படைப்பிலே எத்தனையோ அற்புதங்கள் இருக்கு எண்ணற்ற உயிரினங்கள் பிழைக்க ஏரிக்குளங்கள் மலைகள் மரங்கள் அதற்கும் உயிருண்டு மகிழ்வுண்டாம் அன்னையைப் போல் சீராட்டி கற்பனைக் கெட்டா முறையில் கருவாகி உருவாகி மலருமாம் பூவும் பிஞ்சாகிக் கனியாகுமாம் புயல் காற்றையும்  தாங்குமாம் நெஞ்சம் மகிழத் தாலாட்டி கொஞ்சி வளர்த்தே மகிழுமாம் பச்சை நிறத்தில் தொங்குமாம் பார்ப்பவர் கண்ணும் கெஞ்சுமாம் பக்கம் செல்லப் பார்த்தாலே பயந்துச் சிரித்தே ஆடுமாம் மஞ்சள் நிறமாய் மாறுமாம் மனதைக் கொள்ளை யாக்குமாம் பிஞ்சு முகத்தில்  காணுமாம் பெண்ணாய் வயதைத் தீண்டுமாம் திரண்டக் கனியைக் கசக்கினாலே தீண்டும் சுவையோ அதிகமாம் மீண்டும் மீண்டும் வேண்டுமாம் மிகுந்து விளைவது சேலமாம் புரிந்ததா...? தெரிந்ததா...? இனித்ததா...?

இயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ ?

Image
                                       இயற்க்கையின் மகிழ்ச்சியால் இன்னலேஅதிகமோ இறந்திடும் உயிர்களே இதற்குத் தான்  சாட்சியா இடியும் மின்னலும் யாருக்காய் வந்தது இழப்பினால் மகிழ்ச்சியும் யாரிடம் சென்றது பிழைப்பே சோகமாய் பிரிவுடன்  சென்றது பெருவெள்ளம் பக்தரை பினையாக்கிச் சென்றது உயிர்களைக் காக்கும் உயிரில்லாக் கடவுளும் ஓடி ஒளிந்ததா ஒய்வாக நின்றதா? கிடைத்த வாய்ப்பினால் குறைத்துக் கொண்டதா?

விட்டுப் போன உறவு

விட்டுப்போன உறவும் வேதனைகள் சிலதும் பட்டுபோயும் நாளாச்சு பார்த்துத் தூரப்போயாச்சு கட்டுகடங்கா அன்பில் கடைசிவரை இருக்க காத்திருந்த நட்பும் காலங்கடந்துப் போயாச்சு தொட்டுப் பேசி மகிழ்ந்து துன்பம் மறந்து சிரித்தோம் கட்டுக்கதைப் பலதால் கவலையிப்போ வந்தாச்சு கெட்டுப் போன மனதை திட்டிப்பேசிக் கேட்க தைரியம் தூரப் போயாச்சு தவிப்பு கொண்டே நின்னாச்சு தட்டுப் பட்டு மீண்டும்  தலை குனிந்தே வேண்டி புட்டுப் பார்க்கச் சொல்லி புரியாம மின்று தவிச்சாச்சு

மகளிர் அணியில் மஞ்சுபாஷினி....!!

Image
இனமோ மொழியோ தடுக்காமல் இணைந்தே மகிழ்ந்தோம் வலையாலே பணமோ பொருளோ தேவையின்றி பாசம் கொண்டே இருந்தோமே இளைய வரோடு இணையாக இனிதே சிரித்தோம் சுவையாக அய்யா முகத்தில் பிரகாசம். ஆயிரம் சக்தியைக் கண்டோமே சேட்டைச் சொன்ன சிரிப்பையுமே சேர்ந்தே சிரித்துப்  பார்த்தோமே பழகிய நேரம் குறைந்தாலும் பசுமை மறந்தேப் போகாதே மகளிர் அணியில் மஞ்சுபாஷினியும் மகிழ்ந்தே வந்த சசிகலாவும் மதுமதி கணேசும் கோவைஆவியும் சீனி ரூபக்கும் மாணவரும் அத்தனைப் பேரும் அன்பாக அடிமை கொண்டோம் நட்பாலே சிரித்தே மகிழ்ந்த அந்நேரம் சிறைகை விரித்தே பறந்தோமே எத்தனை வலிமை நட்புக்கு யாரிடம் முடியும் வீராப்பு பித்தமாய் இணைந்த  நட்பாலே பிரிவும் வருமே அதனாலே அன்பாய் பழகிப் பாருங்கள் அடிமைச் சுகத்தைக் காணுங்கள் பண்பாய் சேர்ந்து பழகியே பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே நாங்கள் வளர்க்க விரும்புகிறோம் நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி நண்பராய் நினைத்தே பழகுகிறோம் வல்லவர் வறியவர் சொல்லாமல் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம் இல்லையே என்பதைஉணர்த்தாமல் இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம் முதியவர் இளையவர் பகிர்வின்றி முறையே நட்பாய் மதித்திடுவோம் ஆடவர் பெண்டீர் அனைவருமே அன்பாய் மதித்தே நடந்திடுவோம் நல்லவவை கெட்டவை நடப்பதையே நாலே வரிகளில் எழுதிடுவோம் நன்மையும் தீமையும் நோக்காமல் நலமே போற்றியே பதிவிடுவோம்  இன்னல் துயரம் நடப்புகளை இணைய வலையில் பகிர்ந்திடுவோம் எல்லா ஊரிலும் எம்தமிழை இணையம் கொண்டே வளர்த்திடுவோம் சாதி மதங்களை மறந்திடுவோம் சமத்துவம் நன்றே போற்றிடுவோம் ஊரும் பேரும் தெரியாமல் உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம் இல்லம் இனமே பாராமல் இணைய வழியே பேசிடுவோம் வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..

எப்போதும் எந்நாளும் குடும்பமே என்றிருந்த என் அப்பாவுக்கு இப்போது நன்றி சொல்வேன் இதற்காகத் தலை குனிவேன் மழலையிலே மடியில் கிடத்தி மாறாத அன்பு கொண்டு பணிவிடைகள் பலதும் செய்து பாங்குற வளர்த்தத் தந்தையே தப்பேதும் நான் செய்தால் தவறையே சுட்டிக் காட்டி முப்போதும் அறிவுரைச் சொல்லி முறையாக என்னை வளர்த்தாய் தேவையறிந்து தேடித் தந்தாய் தெவிட்டாத இன்பம் தந்தாய் பூவையிணை மணம் முடித்து புதிய வாழ்கையும்  அமைத்தாய் பொருள் சேர்க்கும் வழிமுறையும் பெரியோரின் மன நோக்கம் புரியும்படி சொல்லி வளர்த்தாய் புனிதனாய் என்னை பார்த்தாய் நாள்முழுதும்  உழைத்தாய் நான் வளரப் பாடுபட்டு நல்வாழ்வை எனக்கு தந்த தோள் கொடுத்த தெய்வமே வணங்குவேன் உன்னை எப்போதும் வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன் கனமும் உன்னை மறவேன் கடமையும் உம்போலச் செய்வேன்

கூட்டங் கூடிக் குடிப்பது

நாளும் கிழமையில் நட்புக்காய் நல்லோர் சிலரின் முன்னிலையில் நற்சுவைக் கலந்தே குடித்தனர் நாகரீகமாய் அங்கேயே மகிழ்ந்தனர் ஆளும் வர்க்க அரசனுடன் அடித்தட்டு மக்களும் கூட்டமாய் அன்றும் சேர்ந்தே சுவைத்தனர் அப்போதே கலைந்து சென்றனர் இன்று எல்லாமே மாறியது எல்லோரும் சேர்ந்து ஆடுவது கல்லாதோர் இல்லாதோர் கூடிக் களியாட்டம் எங்கும் போடுவது எல்லா மக்களுமே சீரழிய எங்கும் கடைகள் திறப்பது கோயில் பள்ளி  அருகிலும் கூட்டம் கூடிக் குடிப்பது இதிலே சமத்துவம் இருப்பதாய் இணைந்தே மகிழ்ந்து குடிப்பனர் இளையவர் முதியவர் மறந்தே இனிமை வேண்டி துடிப்பனர் தினமும் தொடர்ந்தே குடியை  தைரியம் கொண்டே குடித்ததால் தலைக்குப் போதை ஏறவே தரையில் வீழ்ந்தே கிடந்தனர் பணமும் புகழும் அழியவே பாடாய்படுத்தும் இக்குடியை மனமே  திருந்தி நிறுத்தினால் மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ

காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதோ எண்ணியதை எழுதியதை மறக்காமல் இப்போது எழுதுகிறேன் இளமையின்றி  ஏங்குகிறேன் வாழ்க்கை ஓட்டத்திலே வெற்றிபெற ஓடிக் கொண்டே வாய்த்த வாய்ப்புகளை வழிதவறி விட்டுவிட்டேன் அப்போது எண்ணவில்லை அதற்குமே நேரமில்லை அந்தகாலமும் முடிந்ததால் அதற்குமே வேலையில்லை தப்பாக நினைப்போரே தரமறிந்துப் பார்ப்போரே முப்போதும் காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன் எப்போதும் மகிழ்ச்சியாய் எண்ணமதை வைத்திருக்க தற்போதே எழுதுகிறேன் தவறிருந்தால் மன்னிப்பீரே கண்குளிரப் படித்திடவும் கவிஎழுதி முடித்திடவும் காதலிக்கத் தமிழுண்டு காலமெல்லாம் மகிழ்வுண்டு

மேகத்தின் சேதியது...

Image
மேகத்தின் சேதியது மேனியிலே பட்டவுடன் தாகமெடுக்கிறதோ தனிமை தவிக்கிறதோ? பூவெல்லாம் பேசியதும் புல்செடியும் கேட்டவுடன் பூவைக்கு இனிக்கிறதோ பூவைக்கத் துடிக்கிறதோ? வழியெங்கும் பசுமரங்கள் வாழ்த்தாக தூவியே பூமழை பொழிகிறதோ புதுப்பாதைத் தெரிகிறதோ பச்சைக்கிளியும் புறாவும் பக்கமாய்  நெருங்கியே இச்சைச் செய்வது இம்சையாய் இருக்கிறதோ? இளம்மனது கருகியதால் இன்பத்தை இழந்துவிட்டு இப்போது ஏக்கத்தையே இனிமையாக்க மறுப்பதோ? தவறென்ன வாழ்கையில் தைரியமாய் செய்யுங்கள் உறவங்கே மறுத்தாலும் உரிமையாய் தொடருங்கள் வாழ்கையை தீர்மானிக்க வயதுண்டு அறிந்துகொள் வாழ்கையே உன்கைளில் வாழ்வுமுந்தன் உரிமையே

கடவுளை நானும் கண்டதுண்டு..

கடவுளை நானும் கண்டதுண்டு கண்டு நன்றி சொன்னதுண்டு கண் கலங்கி பார்த்ததுமே கடவுளே மயங்கி நின்றதுண்டு பழகியே நான் மகிழ்வதுண்டு பாசமோடு அன்பு கொண்டு பார்க்கும் போது பரவசமாய் பக்தியோடு அமைதி கொண்டு மன மொடிந்த நேரத்திலே மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு நாலு வார்த்தை  மகிழ்ச்சியாக. நானுயர நன்று கேட்டதுண்டு கள்ளமில்லா  நட்பை நானே கடவுளாகப் பார்த்த துண்டு கடைசியிலே சிலர் மறந்து கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு உடலதிலே உள்கூட்டில் ஒளிந்திருக்கும் தசையதுவே உண்மை அன்பு நேர்மையாக்கும் ஒளி மிகுந்த கடவுளாக்கும் உள்ளபடி சொல்லப் போனால் உருவ முள்ள கடவுளில்லை உள்ளோரின் நல்ல அன்பே உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

உத்தமியே நற்சுவையே ...

தூக்கத்திலே தொல்லைத் தரும் தூரதேசப் பேரழகித் தமிழே ஏக்கத்திலே  எப்பொழுதும் நீ என்னை ஏன் இம்சிக்கிறாய் ஆக்கத்திலே உன் பெயரை அனுதினமும் உச்சரித்து ஆனந்த பாடுகிறேன் உன்னை ஆண்டவ நெனனான் போற்றுகிறேன் பாக்களிலும் பரவசம் தந்தாய் பார்த்தவுடன் நவரசமும் ஈந்தாய் ஈரெழுத்து மூவெழுத்து சீருடன் எழுத வைத்தாய் சிரித்தாய் சீர்கொடுத்துச் செம்மைப் படுத்தி சின்னஞ்சிறுப்  பிழையும் பொறுத்து எதுகை மோனையுடன் என்னை எழுதத் தூண்டியே  மகிழ்கிறாய் என்னை ஆட்கொண்டத் தமிழே எண்ணமதில் சிறைபிடித்த அமுதே உன்னை எப்படி மறப்பேன் உத்தமியே நற்சுவையே இனியே..

தினமும் பார்த்தேச் சிரித்திடுமாம்

ஒவ்வொரு உயிருக்கும் உணர்ச்சியுண்டு உண்மையில் அதற்குமே வருத்தமுண்டு பூவும் பிஞ்சும் உதிர்வதனால் பெற்றவள் மரத்துக்கும் செடிக்கும் பிரிவுண்டு பொல்லா நோயும் வரும்போதும் பொழுதும் தலையைச் சாய்த்திடுமே எல்லா உயிரும் மரணத்திலே ஏக்கம் கொண்டே மடிந்திடுமே இடியும் மழையும் வரும்வேளை மனதில்  மகிழ்ந்தே இருந்திடுமே இயற்கை சீற்றம் வரும்போது எளிதில் பயந்தே சரிந்திடுமாம் நீரைச் சுவைத்தே வாழ்த்திடுமாம் நிம்மதி கொண்டேப்  பாடிடுமாம் தேரைப் பாம்பு பூச்சிகளை தினமும் பார்த்தே சிரித்திடுமாம் இயற்கைப் பொய்த்துப் போனாலே எல்லா உயிரும் கலங்கிடுமாம் எப்படி மனித வாழ்க்கையோ  அதற்கும் அப்படி உயிருண்டாம்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து

மேனியெல்லாம் நகையைப் பூட்டி மேல்சாதி என்று சொல்லுவான் மீதுமுள்ள உடல் இடங்களுக்கு மேலும் சாந்தும் பூசுவான் கீழ்த்தட்டில் வாழும்  மக்களையே கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான் கீழிருந்து மேல்வரைப் உற்றுக் கெட்ட வார்த்தைக் கூறுவான் கலர்க்கலராய் ஆடைப் பார்த்து கண் சிவந்து கொள்ளுவான் கண்டபடி மனதில் எண்ணி கஷ்டகாலமென்று  சொல்லுவான் நாட்டுக்கு உழைக்கச் சொல்லி நடித்தும்  நாடக மாடுவான் நாறிப் போன மானத்துக்கு நன்கொடைகள் பல செய்யுவான் கோடிகோடிப் பணத்தை சேர்த்து காவல் காத்து நில்லுவான் கஷ்டப்படும் ஏழைக்கு காசை வட்டிபோட்டு வாங்குவான் கண்டபடி மாத்திரையை மூன்று வேலை தின்னுவான் கடைசியிலும் உடலை வருத்தி கஷ்டமாக உயிரை நீக்குவான்

அவளின்றி எனக்கே மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது

அதிகாலைச் சூரியனே..

Image
அதிகாலைச் சூரியனே அன்பான வரவேற்பு ஆண்டவனைத் தரிசிக்க ஆர்வமுடன் வருகிறாயோ இன்முகத்தில் நீ வந்து இன்னல் தீர வேண்டுகிறாய் ஈசனையும் பார்த்துவிட்டு ஈகையோடு வாழ்த்துகிறாய் என்ன தேடி வருகின்றாய் எதற்காக  நீ கோபமுற்றாய் ஏனிந்த தீக் கனலை ஏற்றிவிட்டு தாக்குகிறாய் ஐயமில்லை உன் கோபம் ஐவருள் நீ அடக்கம்தானே ஒற்றுமையாய்  பஞ்சபூதம் ஒன்றி நன்மை செய்தாலே ஓங்கி வரும் நல்லொழுக்கம் ஒவ்வொருவரும் பேணுவார்கள் அஃதே எல்லோருக்கும் நலமாம்

மகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு

Image
     இன்று 05.06.2013  மாலை 5.00 மணிக்கு புலவர் ஐயாவையும் மற்றும் பிற நண்பர்களையும் காண வந்திருந்த அருமைச் சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்கள் புலவரைய்யா வீட்டிற்க்கு வந்திருந்தார்.அய்யாவின் அவர்களின் விருப்பப்படி நாங்கள் அய்யா வீட்டிற்கு சென்றிருந்தோம். எல்லோரையும் அய்யாவின் இளையமகள் சித்ரா அவர்கள் உபசரித்து வரவேற்றார். அதன்பின் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் படத்தில் முதலில் நான். புலவர்.ரமாநுசம் அய்யா.பாலகணேஷ்,மதுமதி.இபான்.சசிகலா சங்கர் மஞ்சுபாஷினி நான்(கவியாழி),(மின்னல் வரிகள் )பாலகணேஷ்,புலவர் அய்யா, (தென்றல் )சசிகலா,(கதம்ப உணர்வுகள்.)மஞ்சுபாஷினி,மதுமதி புலவர் அய்யாவுடன் சசிகலாவும்,மஞ்சுபாஷினியும் மகிழ்ச்சியுடன். தனியாக எடுத்துக் கொண்ட  புகைப்படம்.   ஏறக்குறைய இரண்டு மணி நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துச் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தது நிச்சயம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியாய் இருந்தது. மறக்க முடியாத நிமிடங்கள் மகிழ்ச்சியான தருணங்கள்

ஆனந்த வாழ்வை பிரியோம்

உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் உருமாறும் காலங்கள் நேரங்கள் உண்மையை புரிந்ததா மனிதம் உலகமே அறியாத புதிராம் பொய்த்துப் போன இயற்கை புரியாத காலநிலை மாற்றம் சொல்லிலே பேசும் செயற்கை சோகமாய் மாறிவிட்ட நேர்மை வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர் சொல்லிலே விஷத்தை சேர்த்தவர் நல்லதை நாளும் செய்பவர் நாணயமே இல்லாத மனிதர் வாழ்கையில் ஏமாற்றம் வரும் வந்தபின் பணிந்து செல்லும் வசந்தமும் வந்து வாழ்த்தும் வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும் இன்னும் உள்ளது மனிதம் எப்படியும் மாறிவிடும் உலகம் அப்படியே சுழற்சி நின்றிடாது ஆழ்கடலும் வற்றிடாது அறியோம் அன்பினை யாருமே மறுத்து அறமே செய்வாரே பொறுத்து நீதியும் நேர்மையும் செயிக்கும் நித்தமும் மகிழ்ச்சியே பெருகும் ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம் ஆனந்த வாழ்வை பிரியோம் இருக்கும் வரையே நமது இறந்த பின்பு யாரறிவார்

மனதிலே அன்பிருந்தால்...

இப்போது வணங்கும் இறைவனே முற்போது வாழ்ந்த மனிதனே வெவ்வேறு வுருவில் வணங்குவர் வேதமும் சொல்லுமெனக் கூறுவர் கல்லாக வீசுகின்ற காற்றாக இல்லாத உருவாய் கூறுவர் நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி நேரில் வந்ததாய் கூறுவர் கல்லாமை இல்லாதோர் வணங்கிடும் இல்லாத உருவமே கடவுளே பொல்லாத வைத்தியம் சொல்லுவர் பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர் இயற்கையே கடவுள் என்றிருந்தால் எதற்குக் கோயிலும் குருக்களும் அதற்குப் அன்றாடம் பூசையும் ஆடும் கோழியும் வேண்டாமே இல்லற வாழ்வை துறந்துதான் இறைவனைக் காண முடியுமானால் இறைவனின் தூதனாய் இருப்பவரும் இல்லறம் தவிர்த்து இருக்கலாமே மனதிலே அன்பைக் கொண்டிருந்தால் மனிதனை நண்பனே என்றிருந்தால் துணிவையே மனதினில் வளர்த்திருந்தால் துணைக்கு சாமியும் வேண்டுமா

வேண்டும்நீ எனக்கு வேண்டும்....

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும் ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா அவரின் இணைக்கு நிகருண்டா பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும் உற்றவர் அன்புக்கு விலையுண்டா கற்றவருமே கண் கலங்குவார் கல்லாதவரோ மனம் புழுங்குவார் சொத்தும் சொந்தமு மெனனக்கு சொல்லென்னா துயரம் தருமே சுகமும் பணமும் வேண்டாமே சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே வாழ்ந்த நாட்களை எண்ணியே வாழ்வு முழுதும் நானிருப்பேன் வாடிபோடி என்றழைத்தே நீயும் வசைபாட வேண்டும் அன்பாக மீண்டும் எழுந்து வருவாய் மேனியில் எழுந்திடு உணர்வாய் தாங்கியே அருகில் உன்னைத் தாய்போல் காப்பேன் அன்பாய் வேண்டும்நீ எனக்கு வேண்டும் மீண்டும் துணைக்குநீ வேண்டும் தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும் தைரியம் சொல்லநீ வேண்டும்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே-- பாடல் 2

நேத்துநானே சொல்லிபுட்டேன் நேரத்தோடு வந்து விட்டேன் காத்திருந்து வாசல்வரைக் கண்டவுடன் துள்ளி ஓடுறாயே ஊர்ச் சனமும் வந்திடுச்சு உறவுகளும் இங்கே கூடிடிச்சு காய்ப் பழங்கள் கனிகளும் கண்ணே உன்னைத் தேடுதே அத்தர் செண்டும் போட்டு அஜந்தாப் பவுடரும் பூசி அத்த மகளுணைக் காண அழகாய் வந்தேன் பாரேன் முன்னே அருகில் வந்து முறையாகச் சிரித்து விட்டு பின்னால் திரும்பி என்னை பெண்மையால் வீழ்த்த வாடி கூட்டத்துல நீ ஒளிஞ்சி நோட்டமிடும் உன் நிழலை பாத்துப் பிட்டேன் பேரழகி பக்கத்துல எப்போ வாரே

ஒத்தைப் பிள்ளை வேண்டாமே

ஒத்தைப் பிள்ளை போதுமின்னு ஒய்யாரம் செய்யும் நண்பா சத்தியமா தப்பு தான்னு இப்போதே சொல்லி விட்டேன் சொத்து பத்து இல்லாட்டி சொந்தம் மட்டும் இருந்தாலே பத்துத் துயர் போக்கிடவே பக்கத் துணை இருப்பாரே மிச்சம்மீதி அன்பை எங்கே மீண்டும் தேடித் போவதெங்கே சொத்தப் புள்ளை ஒத்தையாக சோகமாக இருக்கு நண்பா உத்தரவும் போட வில்லை உருப்படியா சொல்ல வில்லை ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி ஓய்வே இல்லாமப் போச்சி சத்தியமா சொல்லி விட்டேன் ஒத்தப் புள்ள வேண்டாங்க மிச்ச உயிரும் போகுமுன்னே சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க

சென்னையில் இன்று நடைபெற்ற இண்டி.பிளாக்கர் கூட்டம்.

இன்று பகல் 2.00மணிக்கு சென்னை அண்ணாசாலை அறிவாலயம் அருகிலிருக்கும் ரியாத் ஹோட்டலில் இண்டி பிளாக்கர் கூட்டம் நடைபெற்றது.இதில் குறைந்தது இருநூறு பிளாக்கர்கள் வந்திருந்தார்கள்.அனைவரும் அழைப்பின் பேரிலும் முன்பதிவு செய்தும் வந்திருந்தார்கள்.இதில் எல்லா மொழிகளில் இருந்தும் பிளாக் வைத்தவர்கள் பங்கேற்றிருந்தார்கள் இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் இளையத் தலைமுறையினரே அதிக அளவில் இருந்தார்கள்.பெரும்பாலானோர் ஆங்கில பிளாக் வைத்தவர்களும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பிறமொழியினரும் பங்கேற்றார்கள்.எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருபவர்களாம்.பெண்களும்கூட நிறையப்பேர் வந்திருந்தார்கள். ஆரம்பம் தாமதமானாலும் அடுத்தடுத்து பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்து,எல்லோருக்குமே ஊக்கப் பரிசாக திரைப்பட நுழைவு சீட்டு கூப்பன்களை கொடுத்தார்கள் .இடையிடேயே எல்லோரையும் அறிமுகப்படுத்திப் பேசவைத்தது சிறப்பாக இருந்தது. மதிய உணவு சைவம் அசைவம் பிரியாணி போன்ற ஆடம்பர உணவுகளை விரும்பியபடி கொடுத்து மகிழ்ந்தார்கள்.இடைவேளைக்குப்பின் குழுக்களாக பிரித்து குழு நிகழ்ச்சியை நடத்தினார்கள்முதல், இரண்

கவிஞர்களை நானும் போற்றுவேன்

அடுத்தப் புத்தகம் வெளியிட ஆர்வமாய் நானும் உள்ளேன் படித்துப் பார்த்து எனக்கு-சான்றாய் பதிலளித்த வலை நண்பர்களே கொடுத்த ஆதரவுக்குப் பதிலாக கோடி என்னிடம் பணமில்லை பிடித்துப் போன காரணத்தால்-தமிழ் பிறந்த மொழி தெரிந்ததனால் சிறகடித்துப் பறக்கக் கருத்தை சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய் சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே சிற்றெறும்பு போலச் சேர்த்தே பதிவுலகில் நானும் பதிவராக பத்திரிக்கைப் பேசும் மனிதராக பைந்தமிழ் மக்களில் ஒருவராக பணிவுடன் படைக்க விரும்புகிறேன் கற்றறிந்த கவிதை நண்பர்களே கவிதையில் கண்ட சொற்பபிழையை சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன் சொல்வோரை நானும் போற்றுவேன்

நட்பில் நானும் மிதந்தேன்...

நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசிய பின்பு தவித்தேன் சொற்களைக் கண்டு மலைத்தேன் சொல்ல முடியாது திகைத்தேன் இன்னும் சொல்ல நினைத்தேன் இன்முகம் தேடி அலைந்தேன் அகத்துள் நினைவில் வைத்தே(ன்) அன்றே காண விழைந்தேன் வரவைக் கண்டு மகிழ்ந்தேன் வாய்ப்புத் தேடித் துடித்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்ல முறுவல் முகிழ்த்தேன் மீண்டும் மனத்தில் நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரம் இன்றித் தவித்தேன் தொலைவில் இருப்பை அறிந்தேன் தூய நட்பால் நெகிழ்ந்தேன் தமிழைத் தாயாய் துதித்தேன் தாகம் தணியப் படித்தேன்

நெடுநெடுவென வளர்த்தவள்............

நெடுநெடுவென வளர்த்தவள் நேர்ப் பார்வை இல்லாதவள் சிடுசிடுவென இன்று எரிகிறாள் சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள் கடுகடுவெனும் காரணம் காணாது கண்ணைக் கசக்கி அழுகிறாள் விடுவிடுவென எதேயோ தேடி வழியை நோக்கியேப் பார்க்கிறாள் தடதடவென வண்டியில் அவன் தலையைக் கண்டதும் மகிழ்கிறாள் குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி கொஞ்சி அவனை அணைக்கிறாள் கிடுகிடுவென இடியின் சத்தம் கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள் சலசலவென மழையைப் பார்த்ததும் சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள் சிடுசிடுவும் எங்கோ மறைந்தது சீக்கிரம் உண்மையும் தெரிந்தது படபடவென இதயம் துடித்ததும் பயமும் அவளுக்குத் தெளிந்தது

தேனாய் சுவையாய் இனிக்குமாம்

முள்ளு முள்ளாய் இருக்குமாம் முக்கனியுள் பெருத்து வளருமாம் வேலிபோட்ட காவல் தாண்டி வேண்டியது இனிப்பாய் மணக்குமாம் வண்ணம் ஒன்றே மஞ்சளாம் வாசனை எப்போதும் கெஞ்சலாம் வண்ணப் போர்வைப் போர்த்தியே வாழும் நாளோ சேர்த்தியாம் எல்லா நாளும் கிடைக்குமாம் எல்லோர் மனதும் விரும்புமாம் இல்லா மக்கள் மனதுமே இதனை சுவைக்க விரும்புமாம் தின்னத் தின்ன திகட்டுமாம் தேனாய் சுவையாய் இனிக்குமாம் திரும்பத் திரும்பக் கேட்குமாம் தேனில் ஊறியே சாப்பிட்டால் தேனமுதாய் மனதும் மகிழுமாம் எல்லை யில்லா மகிழ்ச்சியே எல்லோர் மனதில் இருக்குமாம் பிள்ளைமுதல் கிழவர்வரை கொள்ளைப் பிரியம் விரும்புமாம் ---பெயரென்ன???

ரசித்தவர்கள்